சென்னை, மார்ச் 4- சென்னை பி.எஸ்.என்.எல் தலைமைப் பொது மேலாளராக வி.கே.சஞ்ஜீவி புதனன்று (மார்ச் 4) பொறுப்பேற்றுக் கொண்டார். அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கிண்டி பொறியியல் கல்லூரியின் மாணவரான இவர், தொலைத் தொடர்புத் துறையில் 33 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் பெற்றவராவார். பிஎஸ்என்எல் நிறுவனத்தின் பல்வேறு பொறுப்புகளில் பல இடங்களில் பணியாற்றிய இவரது சிறப்பான செயல்பாட்டைப் பாராட்டி 2006 ஆம் ஆண்டு சஞ்சார் சேவா பதக்கம் வழங்கப்பட்டது. இதற்கு முன்பாக சென்னை பிஎஸ்என்எல்-லில் தெற்கு தொலைத் தொடர்பு திட்ட முதன்மைப் பொது மேலாள ராக பணியாற்றினார். சென்னைக்கும், அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கும் இடையே கடலுக்கு அடியில் கண்ணாடி யிழை கேபிள் பதிக்கும் திட்டத்தில் இவர் முக்கியப் பங்காற்றியவர்.