திருச்சிராப்பள்ளி, ஜூலை 14 - விவசாயத் தொழிலாளர்களின் கோரிக்கைகளை பேசுவதற்கென தனியாக ஒரு அரசுத் துறை உரு வாக்கப்பட வேண்டுமென அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங் கம் வலியுறுத்தியுள்ளது.
அகில இந்திய விவசாயத் தொழி லாளர்கள் சங்க மத்தியக்குழு கூட் டம், அகில இந்தியத் தலைவர் ஏ. விஜயராகவன் தலைமையில், திருச்சிராப்பள்ளியில் ஞாயிறன்று துவங்கியது.
அகில இந்திய பொதுச்செயலா ளர் பி.வெங்கட், இணைச் செயலா ளர்கள் வி.சிவதாசன் எம்.பி., டாக்டர் விக்ரம் சிங், அகில இந்திய துணைத் தலைவர் ஏ.லாசர், மாநிலத் தலைவர் மா.சின்னதுரை எம்எல்ஏ, மாநில பொதுச் செயலாளர் வீ. அமிர்தலிங் கம், மாநிலச் செயலாளர் எஸ். சங் கர், மாநிலப் பொருளாளர் ஏ. பழநி சாமி, வரவேற்புக் குழு தலைவர் எஸ். ஸ்ரீதர் மற்றும் மத்தியக்குழு உறுப்பி னர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
முன்னதாக இணைச் செயலா ளர்கள் வி. சிவதாசன் எம்.பி., டாக்டர் விக்ரம்சிங் ஆகியோர் செய்தியா ளர்களுக்கு பேட்டி அளித்தனர். அந்த பேட்டியில் அவர்கள் கூறியதாவது:
விவசாயத் தொழிலாளர் சங்கத் தின் மத்தியக்குழு கூட்டத்தில் நாடு முழுவதும் உள்ள விவசாயத் தொழி லாளர்களின் நிலைமை சம்பந்தமாக வும், விவசாயத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம் குறித்தும் விவாதிக்க உள் ளோம். ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று எதிர்பார்த்த நிலையில் மீண் டும் பாஜகவே அதிகாரத்திற்கு வந் துள்ள சூழலில், மக்களுடைய தேவைகளையும், விவசாயத் தொழி லாளர்களின் பிரச்சனைகளையும் தீர்ப்பார்களா? என்ற அச்சம் நிலவு கிறது.
அதிக நிதி ஒதுக்க வேண்டும்
ஏனெனில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலையுறுதித் திட்டம் என்ற நூறு நாள் வேலைத்திட்டத் திற்கு நரேந்திர மோடி தொடர்ச்சியாக நிதி ஒதுக்குவதில்லை. இந்த நிதி நிலை அறிக்கையிலாவது ரூ. 2 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வைத்துள்ளோம்.
விவசாயத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பது என் பது நூறு நாள் வேலை திட்டத்தை சார்ந்ததாகத்தான் இருக்கிறது. ஆனால் நூறு நாள் வேலையை 42 நாள்தான் கொடுக்கிறார்கள். எனவே நூறு நாள் வேலைத்திட்டத்தில் நூறு நாட்களும் வேலை கொடுக்க வேண் டும் என்ற உத்தரவாதத்திற்கான போராட்டத்தையும், நூறு நாள் வேலையை 200 நாட்களாக உயர்த்த வேண்டும். கூலியாக ரூ. 600 வழங்க வேண்டும் என்ற போராட்டத்தையும் நாடு முழுவதும் நடத்துவது என்று தீர்மானித்துள்ளோம்.
தமிழகத்தில் சராசரியாக 42 நாட்கள்தான் வேலை வழங்கப்படு கிறது. குறைந்தபட்ச கூலி நிர்ண யிக்கப்பட்டு 5 ஆண்டுகள் கடந்த நிலையில், இப்பொழுதும் கூலி ரூ. 190 தான் கொடுக்கப்படுகிறது. அதனை ரூ.600 ஆக உயர்த்த வேண்டும் என்ற போராட்டத்தை தமிழகத்தில் நடத்தி வருகிறோம்.
தனியாக ஒரு துறை வேண்டும்
கேரளத்தில் விவசாயத் தொழி லாளர்களுக்கு தினக்கூலி ரூ. 800 கொடுக்கப்படுகிறது. இது மலைக் கும், மடுவிற்கும் உள்ள வித்தியாச மாக உள்ளது. தமிழகத்தில் ஒரு கோடி விவசாயத் தொழிலாளர்கள் உள்ளனர். அவர்களுக்காக சட்டப் பேரவையில் பேசுவதற்கு, நிதி ஒதுக்குவதற்கு தனியாக ஒரு துறை வேண்டும் என்ற கோரிக்கையை அகில இந்திய விவசாயத் தொழிலா ளர்கள் சங்கம் தொடர்ந்து வலி யுறுத்தி கொண்டிருக்கிறது. தமிழக அரசு அகில இந்திய விவசாயத் தொழிலாளர்களின் கோரிக்கையை ஏற்று விவசாயத் தொழிலாளர்கள் கோரிக்கைகள் குறித்து பேசுவதற்கு தனித்துறையை உருவாக்க வேண்டும்.
ஒவ்வொரு ஊராட்சியிலும் 20 பேருக்கு மட்டும்தான் நூறுநாள் வேலை கொடுக்கிறார்கள். எனவே, நூறுநாள் அட்டை வைத்திருக்கிற அனைவருக்கும் வேலை கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து போராட்டம் நடத்துவது என்றும் தீர்மானித்துள்ளோம். நில மற்ற விவசாயக் கூலித் தொழிலா ளர்களுக்கு நிலம் வழங்க வேண்டும். கூலிக்கான சட்டத்தைக் கொண்டு வர வேண்டும். ஏற்றத்தாழ்வு இல்லாத, சாதியற்ற சமூகத்தை உருவாக்க வேண் டும் என்பதை வலியுறுத்தி வலுமிக்க போராட்டத்தை நடத்த தீர்மானித் துள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
பேட்டியின் போது மாநிலச் செய லாளர் மாரியப்பன், வரவேற்புக்குழு செயலாளர் எம்.ஜெயசீலன் ஆகி யோர் உடனிருந்தனர்.