tamilnadu

சென்னை முக்கிய செய்திகள்

சென்னையில் வைரஸ் காய்ச்சல்  பாதிப்பு அதிகரிப்பு 

சென்னை,ஆக.24- சென்னையில் வைரஸ் காய்ச்சல் பாதிப்பு உள்ளவர்கள் தான் அதிகளவில் மருத்துவமனைகளுக்கு வருகிறார்கள் என்று ஸ்டான்லி அரசு மருத்துவமனை பொது மருத்துவத் துறை தலைவர் சந்திரசேகர் கூறியுள்ளார்.

சனிக்கிழமை செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்த அவர்,  டெங்கு காய்ச்சல் 5 நாட்கள் இருந்து பின்னர் படிப்படி யாக குறையும். காய்ச்சல் குறைந்து விட்டது என்று அலட்சியமாக இருக்க கூடாது. அந்த நேரத்தில் தான் வாந்தி,  வயிற்று வலி போன்றவை ஏற்பட்டு உடலில் தட்டணுக்கள் குறைய தொடங்கும்.

எனவே தொடர்ந்து காய்ச்சல் பாதிப்பு இருந்தால் மருத்து வரை அணுகி பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். சீதோஷ்ண நிலை மாறி மாறி நிலவுவதால் காய்ச்சல் பாதிப்பு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

டெங்குவை பொறுத்த வரை காய்ச்சல் வந்தவுடன் சிகிச்சை பெற்று கண்காணிப்பில் இருந்தால் பாதிப்பை ஏற்படுத்தாது. பருவமழை காலம் அக்டோபர் முதல் டிசம்பர்  வரை தான் டெங்குவின் தாக்கம் அதிகரிக்கும்.

வீட்டை சுற்றிலும் சுத்தமாக வைத்திருந்தால் டெங்கு  பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம். பகலில் கடிக்கும் ‘ஏடீஎஸ்’  கொசுக்கள் தான் டெங்கு காய்ச்சல் உண்டாக்குகிறது. வீடுகளையும், சுற்று புறங்களையும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்

கார் பந்தயத்தை பொதுமக்கள் இலவசமாக பார்க்க ஏற்பாடு 

சென்னை, ஆக.24- சென்னையில் வரும் ஆகஸ்ட் 31ம் தேதி ஃபார்முலா 4 கார் பந்தயத்தை நடத்த தமிழக விளையாட்டு மேம்பாட்டு  ஆணையம் முடிவு செய்துள்ளது.  ஏற்கனவே கடந்த டிசம்பர் மாதம் நடக்கவிருந்த போட்டி  ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், அந்த போட்டியை தற்போது  நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது: ஃபார்முலா  4 கார் பந்தயத்தை 8,000 பேர் அமர்ந்து பார்க்கும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட உள்ளன.  சனிக்கிழமை காலையில் கார் பந்தயத்தை பொதுமக்கள் இலவசமாக பார்க்கலாம்.

சனிக்கிழமை மதியத்திற்கு மேல் தகுதிச்சுற்று போட்டி கள் நடத்தப்படும், இரவு 10.30 மணிவரை கார் பந்தய போட்டிகள் நடைபெறும். போக்குவரத்துக்கு எந்தவிட இடை யூறும் ஏற்படாத வகையில் கார் பந்தயம் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கொலை வழக்கில் விசாரணையா? இயக்குநர் நெல்சன் மறுப்பு

சென்னை, ஆக.24- ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் திரைப் பட இயக்குநர் நெல்சனிடம் விசாரணை நடத்தப்பட்டதாக செய்தி வெளியான நிலை யில், எவ்வித விசாரணையும் நடைபெற வில்லை  நெல்சன் மறுப்பு தெரிவித் துள்ளார். தனியார் தொலைக்காட்சி நிருபரிடம் இதனை  தொலைபேசி வாயிலாக தெரிவித்த  அவர், “விசாரணை நடத்தப்பட்டிருந்தால் எப்படி நான் மறுக்க முடியும். என்னுடைய  மனைவியிடமும் நேரடியாக எந்த விசா ரணையும் நடத்தவில்லை. தொலைபேசி வாயிலாக 30 வினாடிக்கு குறைவாக தான் பேசினார்கள்” என்று கூறியுள்ளார்.