tamilnadu

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

மோடியின் சென்னை பேரணியில் விதிமீறல்காவல்துறை வழக்குப் பதிவு

சென்னை, ஏப்.11- மக்களவைத் தேர்தலுக்கான பரப்பு ரைக்காக 6வது முறையாக பிரதமர் மோடி, செவ்வாயன்று (ஏப்.9) தமிழ்நாடு  வருகை தந்தார். சென்னை தியாகராயர்  நகர் பனகல் பார்க் பகுதியில் இருந்து தேனாம்பேட்டை வரை இரண்டு கிலோ  மீட்டருக்கு ‘ரோடு ஷோ’ நடத்தினார்

அப்போது, சென்னை காவல்துறை யின் நிபந்தனைகளை மீறி விளம்பர பதாகைகளை வைத்ததாக அளிக்கப் பட்ட புகாரின் பேரில், சென்னை மாம்ப லம் மற்றும் பாண்டி பஜார் காவல் நிலை யங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட் டுள்ளது. சென்னை காவல்துறை 20 நிபந்தனைகளுடனேயே ‘ரோடு ஷோ’ நடத்த அனுமதி வழங்கியிருந்தது குறிப்  பிடத்தக்கது.

வெளிமாநில ஊர்க்காவல் படையினர் தமிழகம் வருகை
சென்னை, ஏப்.11- தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்த லுக்காக வெளி மாநி  லங்களில் இருந்து கூடுதலாக ஊர்க் காவல் படையினர் தமிழகத்திற்கு வர விருப்பதாக தமி ழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு, சென்னை தலைமை செய லகத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டி யளித்தார். அப்போது, “தமிழ்நாட்டிற்கு தேர்தல் ஆணையத்தால் நிர்ணயிக்கப் பட்ட 190 கம்பெனி துணை ராணுவப் படையினர் பல்வேறு மாவட்டங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்” என்றார். இதில், சென்னை, மதுரை, கோவை மாவட்டங்களுக்கு தலா ஏழு கம்பெனி களும், தேனி, தூத்துக்குடி, கன்னியா குமரி, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்க ளுக்குத் தலா ஆறு கம்பெனிகளும், திருநெல்வேலி, விருதுநகர், திருப்பூர், சேலம் ஆகிய மாவட்டங்களுக்குத் தலா  ஐந்து கம்பெனிகளும் பிரித்து அனுப்  பப்பட உள்ளன. அத்துடன், தமிழகக்  காவல்துறையின் அனைத்து படைப்பிரி வினர், ஊர்க்காவல் படையினர், முன்  னாள் ராணுவத்தினரும் தேர்தல் பாது காப்புப் பணியில் ஈடுபட உள்ளனர் என்று  கூறினார்.

சிபிஎம் தலைவர்களின் இன்றைய பிரச்சாரம்

சீத்தாராம் யெச்சூரி
பொதுச்செயலாளர்   
திண்டுக்கல்

கே.பாலகிருஷ்ணன்
மாநிலச் செயலாளர்   
சிதம்பரம் (காட்டுமன்னார் கோவில், புவனகிரி)

ஜி.ராமகிருஷ்ணன்
அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்
வடசென்னை (பெரம்பூர்)

உ.வாசுகி
மத்தியக்குழு உறுப்பினர்
திண்டுக்கல்

தொலைக்காட்சியில் தேர்தல் பரப்புரை
திமுக தலைமையிலான ‘இந்  தியா’ கூட்டணி வேட்பாளர்  களை ஆதரித்து, தூர்தர்  ஷன் சென்னை தொலைக்காட்சி யில் 12.04.2024 அன்று இரவு 9.20க்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பி னர் ஐ.ஆறுமுகநயினார் உரை யாற்றுகிறார்!

பாஜகவினர் வெடித்த பட்டாசு நாகையில் குடிசைகள் தீக்கிரை
நாகப்பட்டினம், ஏப். 11 - நாகப்பட்டி னம் மக்களவைத் தொகுதிக்கு உட்  பட்ட நாகப்பட்டி னம்-நாகூர் பிர தான சாலையி லுள்ள காடம்பாடி என்ற பகுதியில் பாஜகவினர் வாக்கு சேகரித்தனர். அப்போது வேட்பாளரை வரவேற்பதற்காக பட்டாசுகள் வெடித்துள்ளனர். இந்த பட்டாசுகள் வெடித்து சிதறி, சாலையோரம் இருந்த பக்கிரிசாமி என்பவரது குடிசை வீட்டின் மீது விழுந்தது. இதில் மளமளவென தீ பரவி வீட்டின் கூரை முழுவதும் பற்றி எரிந்தது. அருகிலுள்ள சுப்பிரமணியன் என்பவரது வீட்டின் கூரையின் மீதும் தீப்பிடித்து எரிந்தது. பல லட்சம் ரூபாய்  பொருட்கள் சேதமாகின. ஆனால், தீயை  அணைக்க முயலாத பாஜகவினர், அந்த இடத்திலிருந்து நைசாக நழுவி ஓடியுள்ளனர்.