பெஞ்சல் புயல் காரணமாக ஏற்பட்ட மழையில் சிக்கி விழுப்புரம் மாவட்ட டாஸ்மாக் ஊழியர் சக்திவேல் கடந்த வாரம் உயிரிழந்தார். இவரின் மறைவிற்கு சிஐடியு கோவை மாவட்ட டாஸ்மாக் ஊழியர் சங்கத்தின் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில், சிஐடியு டாஸ்மாக் ஊழியர் சங்கத்தின் தலைவர் மூர்த்தி, செயலாளர் ஜான்அந்தோனிராஜ் மற்றும் நிர்வாகி செந்தில்பிரபு உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.