tamilnadu

img

மலையை அழிக்க கிராம மக்கள் எதிர்ப்பு

திருவண்ணாமலை, நவ. 20- திருவண்ணாமலை மாவட்டம், போளூர் தாலுகா, செங்குணம் கிராம மக்களின் வாழ்வாதாரமாக உள்ள மலையை அழிக்க வேண்டாம் என கோரிக்கை விடுத்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் போளூர் வட்டம் செங்குணம் கிராமத்தில் சுமார் 23 ஹெக்டேர் பரப்பளவுள்ள அரசு புறம்போக்கு இடத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு கனிம நிறுவனத்திற்கு சொந்தமான கிரானைட் குவாரிக்கு சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதற்காக சமீபத்தில் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது. இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த செங்குணம் கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- போளூர் வட்டம், செங்குணம் அடுத்த பங்களாமேடு காட்டுவா மலையடிவார பகுதியில், சுமார் 30 ஆண்டு காலமாக நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். நாங்கள் வசித்து வரும் குடிமனைகளுக்கு வீட்டுமனை பட்டா கேட்டு, நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வருகிறோம்.  எங்கள் வாழ்விடத்திற்கு அருகில் இருக்கும் மலைப்பகுதியால், நீர் நிலை பாதுகாக்கப்பட்டு வருகிறது. பல்வேறு மரங்கள் உற்பத்தியாகி வருகிறது. காட்டு விலங்குகள், பறவைகள் என பல்லுயிரினங்கள் இந்த மழையை நம்பி வாழ்ந்து வருகிறது.  இந்த மலையைச் சுற்றி, பங்களாமேடு, செங்குணம், பாக்மார் பேட்டை, முருகா பாடி உள்ளிட்ட கிராமங்கள் அமைந்துள்ளது. இந்த மலைப்பகுதியில்  கிறிஸ்தவர்களின் தேவாலயம் மற்றும்  இந்துக்களின் கோயில் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்கள் அமைந்துள்ளது. எனவே இந்த மலையை அழிக்காமல் பாதுகாக்கவேண்டும். இவ்வாறு தெரிவித்திருக்கிறார்கள்.