திருவண்ணாமலை, ஜூன் 12- 100 நாள் வேலை வழங்கக்கோரி கீழ்கரிப்பூர் கிராம பொதுமக்கள் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் வட்டம், திருவண்ணா மலை ஒன்றியத்திற்குட்பட்ட கீழ்கரிப்பூர் ஊராட்சி மன்றத் தலைவராக ஏ.கலாவதி அன்பழகன் உள்ளார். கீழ் கரிப்பூர் ஊராட்சி யில் கல்லணை மற்றும் கரிப்பூர் இரண்டு குக்கிராமங்கள் உள்ளன. இந்த இரண்டு கிரா மங்களிலும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் ஏற்கனவே இருவர் பணித்தள பொறுப்பாளர்களாக பணியாற்றி வருகின்றனர். இவர்களின் செயல்பாடுகள் சரியில்லை என்பதால் தலை வர், துணைத் தலைவர் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் இணைந்து அவர்கள் இருவரையும் அப்பணியில் இருந்து விடு வித்து புதிதாக இருவரை பணித்தள பொறுப்பாளர்களாக நியமிக்க தீர்மானம் இயற்றியுள்ளனர்.
இந்நிலையில் கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 மாதங்களாக 100 நாள் வேலை திட்டப் பணிகள் எதுவும் நடைபெற வில்லை. கடந்த 5 நாட்களுக்கு முன்பு 100 நாள் வேலை திட்டப் பணிகள் தொடங்கியது. இதனை ஏற்கனவே பணிபுரிந்த பணித்தள பொறுப்பாளர்கள் அங்கு பணிபுரியும் பணியாளர்களை வேலை செய்ய விடாமல் தடுத்துள்ளனர். இதனை தட்டிக்கேட்ட ஊராட்சிமன்றத் தலைவரையும் மிரட்டி யுள்ளனர். இந்நிலையில் திருவண்ணாமலை வட்டார வளர்ச்சி அலுவலர், ஊராட்சி மன்றத் தலைவரை தொடர்பு கொண்டு பழைய பணித்தள பொறுப்பாளர்களையே வைத்துக் கொண்டு 100 நாள் திட்ட வேலை வழங்கு மாறு கூறியுள்ளார். இல்லையெனில் வேலையை நிறுத்தும்படி வாய்வழியாக உத்தரவிட்டுள்ளார். இதனைக் கண்டித்து கீழ்கரிப்பூர் ஊராட்சி மன்றத் தலைவர் தலைமையில் 200க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது வட்டார வளர்ச்சி அலுவலர் அங்கு இல்லாத்தால், ஊராட்சி ஒன்றிய அலுவலக மேலாளரிடம் மனு அளித்துவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.