tamilnadu

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

அயனாவரத்தில்  ரூ.1.20 கோடியில் சிறார் மன்றம்

பெரம்பூர், மே 16- அயனாவரத்தில் ரூ.1.20 கோடி மதிப்பில் கட்டப்பட்ட சிறார் மன்றத்தை கூடுதல் ஆணையர் பிரவேஷ்குமார் திறந்து வைத்தார். சென்னையில் சிறுவர், சிறுமிகள் கல்வி மற்றும் விளையாட்டில் சிறந்து விளங்கும் வகையில் காவல்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக ‘சிறார் மன்றம்’ மூலம் மாணவர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள், கல்வி உதவித்தொகை ஆகியவை வழங்கப்படுகிறது. மேலும், தன்னார்வ நிறுவனங்கள் மற்றும் சென்னை மாநகராட்சி இணைந்து பல்வேறு இடங்களிலும் சிறார் மன்றங்கள் கட்டப்பட்டு, பாடம் படிக்கவும், விளையாடி மகிழவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை அயனாவரம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பச்சைக்கல் வீராசாமி குடியிருப்பு விளையாட்டு மைதானத்தில், சென்னை மாநகராட்சி மற்றும் எச்சிஎல் பவுண்டேஷன் இணைந்து ரூ.1.20 கோடி மதிப்பில் சிறார் மன்றம் கட்டப்பட்டது. இதனை வடக்கு மண்டல கூடுதல் காவல் ஆணையாளர் பிரவேஷ்குமார் நேற்று திறந்து வைத்தார்.

ஓட்டுநர்களுக்கு உடல் பரிசோதனை:  நடமாடும் மருத்துவ பிரிவு துவக்கம்

சென்னை, மே 16- லாரி ஓட்டுநர்கள் மற்றும் அதன் ஊழியர்களின்  சுகாதாரப் பரிசோதனைக்காக, அப்பல்லோ டயர்ஸ் நிறுவனம், ‘அப்போலோ டயர்ஸ் ஹெல்த்கேர் எக்ஸ்பிரஸ்’ என பெயரில் நடமாடும் மருத்துவ பிரிவை துவக்கியுள்ளது.  இதனை  ஆலையின் பிரிவுத் தலைவர் சி. தாமஸ் மேத்யூ வெள்ளியன்று (மே 16) கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். இந்த மொபைல் மருத்துவப் பிரிவு, எச்.ஐ.வி/எய்ட்ஸ், பாலியல் ரீதியாக பரவும் தொற்றுகளைத் தடுப்பது (STIs), பார்வை பராமரிப்பு, காசநோய் மற்றும் நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட தொற்றாத நோய்கள் போன்ற முக்கியமான சுகாதாரப் பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, லாரி ஓட்டுநர் சமூகத்திற்கு முக்கியமான சுகாதார சேவைகளையும் வழங்கும். மாதவரம், மஞ்சம்பாக்கம் மற்றும் பூந்தமல்லி ஆகியவற்றை உள்ளடக்கிய 50 கிமீ சுற்றளவில் 10,000 க்கும் மேற்பட்ட லாரி ஓட்டுநர்களுக்கு இந்த சேவை பயன்படும்.

ராணிப்பேட்டை: 10 ஆம் வகுப்பு  தேர்வு: 91.30 % மாணவ, மாணவியர்கள் தேர்ச்சி

ராணிப்பேட்டை, மே. 16 – ராணிப்பேட்டை மாவட்டத்தில் 10 ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு 2025ல் 91.30% மாணவ, மாணவியர்கள் தேர்ச்சி பெற்றுள்ள னர்.  கடந்த ஆண்டைக் காட்டி லும் 6 % தேர்ச்சி விகிதம் அதி கரித்துள்ளது. 2025 ல் அரசு பள்ளிகளின் தேர்ச்சி 89.61% கடந்த ஆண்டைக் காட்டிலும் 7% தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மொத்த மாணவ, மாணவியர்கள் எண்ணிக்கை 14622 தேர்ச்சி பெற்றவர்கள் 13350 தேர்ச்சி விகிதம் 91.30 % இதில் தேர்வு எழுதிய 7282 மாணவிகள் 6900 மாணவி கள் தேர்ச்சி பெற்று 94.75% பெற்றுள்ளனர். 7340 மாணவர்கள் 6450 மாணவர்கள் தேர்ச்சி பெற்று 87.87% பெற்றுள்ளனர். அரசுப் பள்ளிகளில் மட்டும் 8941 மாணவ, மாணவியர்கள் தேர்வு எழுதினர். இதில் 8012 மாணவ, மாணவியர்கள் தேர்ச்சி பெற்று 89.61% பெற்றுள்ளார். தொடர்ந்து, நடப்பாண்டில் மாணவ - மாணவியர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க பல்வேறு சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் ஜெ.யு. சந்திரகலா தெரிவித்துள்ளார். ஆற்காடு சாந்தி நிகேதன் மெட்ரிக் பள்ளி மாணவன் எஸ். சஞ்சய் 497 மதிப்பெண் பெற்று முதலிடமும், செட்டித்தாங்கல் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவி வி. நந்தினி 495 மதிப்பெண் பெற்று முதலிடம் பெற்றுள்ளனர்.  தேர்ச்சி பெற்றுள்ள அனைத்து மாணவ, மாணவியர்களுக்கு மாவட்ட ஆட்சியர் ஜெ.யு. சந்திர கலா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ரூ.10ஆயிரம் லஞ்சம் பெற்ற  கிராம நிர்வாக அலுவலர் கைது

கடலூர், மே 16- 10 ஆயிரம்  ரூபாய் லஞ்சம் பெற்றதாக கிராம நிர்வாக அலுவலரை போலீசார் கைது செய்துள்ளனர். விருத்தாசலம் அடுத்த தொரவலூரை சேர்ந்தவர் வேலாயுதம் (68). இவரது நிலத்தை அளந்து அத்து காட்டுவதற்கு ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளார். பின்னர் நிலத்தை அளந்து அத்து காட்ட, தொரவலூர் விஏஓ  தனசேகர் தனக்கு லஞ்ச மாக ரூ.10ஆயிரம் தர வேண்டும் என வேலாயுதத்திடம் கேட்டுள்ளார். ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத வேலா யுதம் உடனே கடலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீ சில் புகார் அளித்தார். இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கூறிய அறிவுரையின் படி வெள்ளியன்று   வேலா யுதம் ரசாயன பொடி தடவிய பணத்தை கிராம நிர்வாக அலு வலர் தனசேகரிடம் கொடுத்த போது லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் கையும் களவுமாக மடக்கி  பிடித்து கைது செய்தனர்.