சென்னை:
தேமுதிக தலைவர் விஜயகாந்த் விரைவில் வீடு திரும்புவார் என மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
தேமுதிக தலைவா் விஜயகாந்த் மற்றும் அவரது மனைவி பிரேமலதா இருவரும், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இருவரின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதைத் தொடா்ந்து, மருத்துவமனையில் இருந்து அண்மையில் வீடு திரும்பினர்.தொடர்ந்து,வீட்டுக் கண்காணிப்பில் இருந்து வந்த விஜயகாந்துக்கு, செவ் வாய்க்கிழமை மாலை உடல்நலக் குறைவு ஏற்பட்டதை அடுத்து, அவர் சென்னை மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் மீண்டும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.இந்நிலையில், விஜயகாந்த் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், அவர் விரைவில் வீடு திரும்புவார் என்றும் மியாட் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.