tamilnadu

img

நலமுடன் இருக்கிறார் விஜயகாந்த்: தேமுதிக 

சென்னை:
தேமுதிக தலைவர் விஜயகாந்த், கொரோனா பாதிப்பு காரணமாக செப்டம் பர் 22 ஆம் தேதி மாலை சென்னை மணப் பக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.இந்நிலையில், தேமுதிக தலைமை கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”ஆறு மாதத்திற்கு ஒருமுறை உடல் பரிசோதனைக்காக விஜயகாந்த் சென்னை மியாட் மருத்துவமனைக்கு செல்வது வழக்கம்.அந்த வகையில் சென்னை மியாட் மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக சென்ற விஜயகாந்துக்கு லேசான கொரோனா அறிகுறி தென்பட்டது. இருப்பினும் உடனடியாக அது சரி செய்யப்பட்டுவிட்டது. தற்போது பூரண உடல் நலத்துடன் விஜயகாந்த் இருக்கிறார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

;