tamilnadu

தீக்கதிர் முக்கிய செய்திகள்

முதல்வர் தலைமையில துணைவேந்தர்கள் கூட்டம்

சென்னை,ஏப்,13- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை யில் புதன்கிழமை (ஏப்.16) மாலை சென்னை, தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் தமிழ்நாட்டில் உயர்கல்வியை மேம்படு த்துவதற்காக அனைத்துப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மற்றும்  பதிவாளர்களின் ஆலோ சனைக் கூட்டம் நடைபெற வுள்ளது. இந்ததகவலை தமிழக அரசு தெரிவித்துள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்பை அடுத்து பல்கலை கழகங்க ளின் வேந்தராக மு.க.ஸ்டா லின் நியமிக்கப்பட்ட பின்னர் நடைபெறும் முதல் கூட்டம் இதுவாகும்.

போட்டி எழுத்துத்தேர்வு முடிவுகள்

சென்னை,ஏப்,13- ஆசிரியர் தேர்வு வாரியத் தால் நடத்தப்படும் போட்டி எழுத்து தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகி இருக்கிறது. https://trb.tn. gov.in/more_notifi cation_details.php?id=MN-868 என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

ஆளுநரை ரவியை உடனடியாக  திரும்பபெற சிபிஐ வலியுறுத்தல்

தமிழக ஆளுநர் ரவியை உடனடியாக திரும்பபெறவேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலி யுறுத்தியுள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் விடுத்துள்ள அறிக்கையில், ஆர்.என்.ரவி ஆளுநரின் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி, அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமாக செயல்பட்டு வருவதை எதிர்த்து இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி உட்பட ஜனநாயக சக்திகள் நேரடி போராட்டங்களை நடத்தி வருகின்றன. தமிழ்நாடு  சட்டமன்றம் நிறைவேற்றிய மசோ தாக்களை கிடப்பில் போட்டு, மக்கள் நலனுக்கும், மாநில உரிமைக்கும் எதிராக செயல்பட்டதுடன், கூட்டாட்சி கோட்பாடுகளை நிராகரித்து வந்தார்.  இந்த நிலையில் உச்ச நீதிமன்றம் அரசி யலமைப்பு சட்டம் ஆளுநருக்கு வழங்கி யுள்ள கடமைப் பொறுப்புகளையும், அதிகார எல்லையினையும் தெளிவு படுத்தி, ஆர்.என்.ரவியின் செயல் பாடுகள் சட்டவிரோதமானது என அறி வித்துள்ளது. இத்தீர்ப்பை தொடர்ந்து ஆளுநர் பொறுப்பில் ஒரு வினாடியும் நீடிக்க  தகுதியில்லாத ஆளுநர் ஆர்.என்.ரவி, பொது நிகழ்வுகளில் கூச்சமில்லாமல் கலந்து கொள்கிறார். திருப்பரங்குன் றம் தியாகராசர் கல்லூரியில் நடை பெற்ற கம்பன் விழாவில் பங்கேற்ற ஆர்.என்.ரவி, தமிழ்நாட்டின் பண்புக்கும், கலை, கலாச்சார மரபுக்கும் எதிராக “ஜெய் ஸ்ரீராம், ஜெய் ஸ்ரீராம்” என முழக்கம் எழுப்பியதுடன், அந்த நிகழ்வில் கலந்து கொண்ட மாண வர்களையும் ஜெய் ஸ்ரீராம் என முழக்கம் எழுப்புமாறு நிர்பந்தித் துள்ளார். நீதி மன்றத் தீர்ப்புகளுக்கும். சட்டத்துக்கும் மேலாக தன்னை கருதிக் கொள்ளும் “அடங்கா பிடாரி”  ஆர்.என்.ரவியை குடியரசுத் தலைவ ரும், ஒன்றிய அரசும் உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என  இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலி யுறுத்துவதாக முத்தரசன் தெரி வித்துள்ளார்.