வேலூர், ஜூன் 23- வேலூர் மாவட்டம் கணியம்பாடி புதூர் கிராமத்தில் தமிழ்நாடு வேட்டைக்காரன் பழங்குடி மக்கள் முன்னேற்ற சங்கக் கிளை துவக்கவிழா, பெயர்ப் பலகை திறப்பு விழா கிளைத் தலைவர் கே சீனிவாசன் தலைமையில் நடை பெற்றது. கிளைச் செயலாளர் வெங்கடேசன் வரவேற்றார். மாவட்ட நிர்வாகிகள் கலை வாணி,சித்ரா கிளை நிர்வாகி கள் வெங்கடேசன், கந்த சாமி, பவானி, முனிய ம்மாள், அமராவதி, அர்ச்சனா, சுதாகர், செல்வம் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு வேட்டைக்கா ரன் பழங்குடி முன்னேற்ற சங்க மாநிலத் தலைவர் எம்.சேட்டு, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் ப.சக்திவேல், மாவட்டப் பொருளாளர் சி.எஸ்.மகாலிங் கம், மாவட்ட துணைத் தலைவர் ஜி.நரசிம்மன், தாலுகா செய லாளர் டி.வசந்தகுமார் ஆகி யோர் வாழ்த்திப் பேசினர். தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் மாநிலத் தலைவர் பி. டில்லிபாபு சங்கத்தின் பெயர் பலகையை திறந்த வைத்து பேசுகையில், “கணியம்பாடி புதூர் பகுதியில் வசிக்கும் 150க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு வீட்டு மனை பட்டா கேட்டும், 20க்கும் மேற்பட்ட குடும்பங்க ளுக்கு வீட்டுமனையும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்பதை பழங்குடி (எஸ்டி) என சாதிச்சான்று வழங்க வலியுறுத்தியும் போராட்டம் நடத்தப்படும்” என்றார்.