சென்னை, டிச.7 -
மிக்ஜம் புயல் காரணமாக கொட்டித்தீர்த்த கனமழைக்கு இடையே சென்னைக்கு குடிநீர் வழங்கி வரும் புழல் ஏரியின் கரை உடையும் அபாயத்தில் இருப்பதாக வெளியான தகவலுக்கு தமிழ்நாடு அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு நீர்வளத் துறை செயற்பொறியாளர் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதா வது:-
புழல் ஏரியானது சென்னை மாநகர குடிநீர் தேவைக்கு பயன்படுத்தப்பட்டு வரும் மிக முக்கியமான ஏரியாகும். வியாழக்கிழமை (டிச.7) காலை 6 மணி நிலவரப்படி 20 அடி நீர் இருப்பு இருந்தது.
ஏரியின் இதன் கொள்ளளவு 3012 மி.க. அடியாக உள்ளது. நீர்வரத்து 550 கன அடியாக உள்ளது. தற்போது ஏரியில் இருந்து வினாடிக்கு 100 கன அடி வீதம் உபரி நீர் வெளி யேற்றப்பட்டு வருகிறது.
கடந்த சில நாட்களாக மிக்ஜம் புயலால் அதிக அளவில் கனமழை பெய்ததால் ஏரிக்கு நீர்வரத்து கூடுத லாக வந்து கொண்டிருந்ததால் ஏரி யின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வந்த நிலையில், உபரி நீர் வினாடிக்கு 5500 கன அடி வெளியேற்றப்பட்டு வந்தது.
அப்போது ஏற்பட்ட கடுமையான சூறாவளி காற்றால் ஏரியில் மிக கடுமை யான அளவில் அலைகள் ஏற்பட்டு கலங்களின் மேல் தண்ணீர் வெளி யேறியது.
ஆனால் காவல்துறை பாதுகாப்பு அறை பின் பகுதியில் கரையில் உள்ள பக்கவாட்டு தாங்கும் சுவர் பக்கத்தில் அடுக்கி வைத்திருந்த கருங்கல்லா லான அப்ரோன் சரிந்து மண் அரிப்பு ஏற்பட்டது. இது ஏரியின் எஃப்டிஎல்ஐ விட 2 மீட்டர் உயரத்தில் அமைந் துள்ளது. இதன் வழியாக தண்ணீர் வெளியேறவில்லை. மேலும் கலங்கள் வழியாக அலைகளால் தண்ணீர் வெளியேறியதால் சாலையில் அரிப்பு ஏற்பட்டது. தற்போது மண் அரிப்பு ஏற்பட்ட சாலை பகுதிகளில் கிராவல் மண் கொட்டி மட்டுப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர்கள் ஆய்வு
இந்த நிலையில், புழல் ஏரி நிரம்பி அதன் கரை உடையும் அபாயம் உள்ளதாக தகவல்கள் வெளியானது. இதையடுத்து நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், பத்திரப் பதிவு துறை அமைச்சர் வி.மூர்த்தி ஆகியோர் நேரில் சென்று புழல் ஏரியை பார்வையிட்டனர். அப்போது, ஏரியின் உறுதித்தன்மை குறித்து ஆய்வு செய்து அதிகாரிகளிடம் நிலைமை குறித்து கேட்டறிந்தனர்.