tamilnadu

கடலூர் , சிதம்பரம் மற்றும் வேலூர் முக்கிய செய்திகள்

போலி மருத்துவர் கைது

கடலூர், ஜூன் 29- கடலூர் மாவட்டம் திட்டக்குடியை அடுத்துள்ள கொட்டாரம் கிரா மத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் (49). இவர் திட்டக்குடி - விருத்தாசலம் மாநில  நெஞ்சாலை யோரம் கூடலூர் பேருந்து நிறுத்தம் அருகே மருந்துக்கடை  நடத்தி வந்தார். கல்வியியல் படிப்பு முடித்துள்ள ரமேஷ்,  மருத்துவப்  படிப்பு பயிலாமலேயே மருந்துக் கடையினுள் மருத்துவ உபகரணங்க ளைக் கொண்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருவதாக காவல்  துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, திட்டக்குடி காவல்  ஆய்வாளர் ஸ்ரீபிரியா தலைமையில் காவல் துறையினர் மருந்துக் கடைக்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், மருத்துப்  படிப்பு படிக்கவில்லை என்பதும், ஆசிரியர் பட்டப்படிப்பு முடித்துவிட்டு,  சட்ட விரோதமாக மருத்துவ உபகரணங்கள் வைத்து சிகிச்சையளித்து வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து காவல் துறையினர் ரமேஷை கைது செய்து அருகில்  உள்ள ஆவினங்குடி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அதேபோன்று, திட்டக்குடி பெரிய கோயில் தெருவில் உள்ள மருந்து  விற்பனைக் கடையில் சட்ட விரோதமாக மருத்துவ உபகரணங்களைக் கொண்டு இரண்டு இளம் பெண்கள், நோயாளிக்கு சிகிச்சையளித்து வந்தது தெரியவந்தது. இதுசம்மந்தமாக அந்த 2 பெண்களிடமும் காவல்  துறையினர் விசாரணை  நடத்தி வருகிறார்கள்.

தேர் திருவிழா

சிதம்பரம், ஜூன் 29- கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆண்டுக்கு இரு முறை ஆனித் திருமஞ்சனம், மார்கழி ஆருத்ரா, இரு முறை தேர் மற்றும்  தரிசன திருவிழா நடைபெறும். இந்த வருடம் கொடியேற்றும் நிகழ்ச்சி  சனிக்கிழமையன்று நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சி யாக வரும் 7ஆம் தேதி தேர் திருவிழாவும், 8ஆம் தேதி மதியம் 3 மணிக்குள் தரிசன நிகழ்ச்சியும் நடைபெறும். இந்த விழாவில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும்,  வெளி நாடுகளில் இருந்து பக்தர்கள் திரளாக கலந்துகொள்வார்கள்.

வேலூர் பளுதூக்கும் சிறப்பு மையத்திற்கு வீரர்கள் தேர்வு

சிதம்பரம், ஜூன் 29- கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆண்டுக்கு இரு முறை ஆனித் திருமஞ்சனம், மார்கழி ஆருத்ரா, இரு முறை தேர் மற்றும்  தரிசன திருவிழா நடைபெறும். இந்த வருடம் கொடியேற்றும் நிகழ்ச்சி  சனிக்கிழமையன்று நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சி யாக வரும் 7ஆம் தேதி தேர் திருவிழாவும், 8ஆம் தேதி மதியம் 3 மணிக்குள் தரிசன நிகழ்ச்சியும் நடைபெறும். இந்த விழாவில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும்,  வெளி நாடுகளில் இருந்து பக்தர்கள் திரளாக கலந்துகொள்வார்கள்.