tamilnadu

வேலூர் முக்கிய செய்திகள்

வேலூர் ஆவின் நிறுவனம் இரண்டாகப் பிரிப்பு

வேலூர், செப். 9- வேலூர், திருவண்ணாமலை மாவட்டப் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றிய மான ஆவின்  தலைமை அலுவலகம் வேலூர்  சத்துவாச்சாரியில் இயங்கி வருகிறது. இதன் கட்டுப்பாட்டில் இரு மாவட்டங்களில் உள்ள 770 பால் கூட்டுறவுச் சங்கங்கள் மூலம்  தினமும் சுமார் 5 லட்சம் லிட்டர் பால்  கொள்முதல் செய்யப்பட்டு, 2 லட்சம் லிட்டர்  பால் சென்னைக்கு அனுப்பப்படுகின்றன. மீத முள்ள பாலில் 72 ஆயிரம் லிட்டர் பால்  பாக்கெட்டுகளை பொதுமக்கள் விற்ப னைக்காகவும், நெய், பால்கோவா, மோர், லஸ்ஸி, குல்ஃபி உள்ளிட்ட பால் உப  பொருள்களாகவும் தயாரிக்கப்படுகின்றன. இந்நிலையில், வேலூர் ஆவின் கூட்டு றவு ஒன்றியத்தை வேலூர், திருவண்ணா மலை என இரண்டாக பிரிக்கப்படும் என்று  கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினவிழா வில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்திருந்தார். அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது. இதையடுத்து, ஆவின் நிர்வாகம், அதிகாரிகள் நியமனம் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடத்தி வருகிறது.  இதுகுறித்து, ஆவின் அதிகாரிகள் கூறு கையில், “வேலூர் ஆவின் கூட்டுறவு சங்கத் தின் கட்டுப்பாட்டில் வேலூர் மாவட்டத்தில் 272 சங்கங்களும், திருவண்ணாமலை மாவட்  டத்தில் 498 சங்கங்களும் உள்ளன. தற்போது  ஆவின் நிறுவனம் வேலூர், திருவண்ணா மலை என இரண்டாகப் பிரிக்கப்படுவதால் அந்  தந்த மாவட்டங்களில் உள்ள சங்கங்கள் அந்  தந்த மாவட்டத்துடன் இணைக்கப்படும்”.  “வேலூர் மாவட்டத்தில் உள்ள சங்கங்கள் மூலம் தற்போது 1.50 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. இந்த கொள்முதலை அதிகரிக்கும் வகையில் ஊழியர்கள், பால் முகவர்களிடம் புதிய திட்டத்தை செயல்படுத்த உள்ளோம். வேலூர், திருவண்ணாமலை என இரு மாவட்டங்களாக ஆவின் நிறுவனத்தை பிரிப்பதால் இரு மாவட்ட கூட்டுறவு சங்கங் களும் லாபத்தில் இயங்க வாய்ப்புள்ளது. தற்போது நிர்வாகம், கணக்குப் பிரிவிலுள்ள ஊழியர்களை பிரிப்பது தொடர்பான ஆலோ சனை நடைபெற்று வருகிறது,” என்றனர்.

வேலூர் கோட்டை அகழியைத் தூர்வார மிதவை இயந்திரங்கள் 

வேலூர், செப். 9- வேலூர் கோட்டையிலுள்ள அகழியைத் தூர்வார சென்னையில் இருந்து 4 மிதவை இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டுள்ளன. தூர்வா ரும் பணி பொலிவுறு நகரம் (ஸ்மார்ட்  சிட்டி) திட்டத்தின் கீழ் வேலூர் கோட்டை அகழியை தூர்வாரி அழகு படுத்துவதற்கான சீரமைப்புப் பணி கள் நடைபெற்று வருகின்றன. முதற்கட்டமாக பெரியார் பூங்கா பின்புறம் உள்ள தண்ணீர் இல்லாத பகுதியில் ஜேசிபி மூலம் அகழி தூர்வாரும் பணி கடந்த 2 மாதங்க ளாக நடைபெற்று வந்தன. தண்ணீர்  உள்ள பகுதிகளைத் தூர்வாருவ தற்கு மிதவை இயந்திரங்கள் வர வழைக்கப்படும் என்றும் தெரி விக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், சென்னையில் இருந்து 4 மிதவை இயந்திரங்கள் கடந்த 2 தினங்களுக்கு முன்பு வேலூருக்கு கொண்டு வரப்பட்டன. இவற்றின் மூலம் அகழியில் உள்ள  சகதி, குப்பைகள் அகற்றப்பட உள்ளன. இந்த பணிகள் திங்கள்கி ழமை முதல் மேற்கொள்ளப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.