சென்னை, மே 11- கோயம்பேடு சந்தையில் வியாபாரம் செய்ய அனுமதிக்க கோரி திங்களன்று (மே 11) சிறு மொத்த வியாபாரிகள் போராட் டத்தில் ஈடுபட்டனர். கோயம்பேடு சந்தை வளாகத்தின் 6 மற்றும் 7 ஆம் எண் (கேட்) வாயில்கள் முன் 300க்கும் மேற்பட்ட சிறு மொத்த காய்கறி வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகை யில், கோயம்பேடு காய்கறி சந்தையில் கடந்த 20 நாட்களுக்கு முன் வியாபாரிகள் தாங்க ளாக முன்வந்து விடுமுறை அளித்தனர். சிறு மொத்த வியாபாரக் கடைகள் அதன்பிறகு திறக்கப்படவில்லை. திருமழிசை பகுதியில் காய்கறி மொத்த வியாபாரம் திங்களன்று (மே 11) தொடங்கியுள்ளது. ஆனால் அங்கு பெரும் மொத்த வியாபாரிகளுக்கு மட்டுமே கடைகள் ஒதுக்கப்பட்டுள்ளது, இதனால் சிறு மொத்த வியாபாரிகளின் வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டு, வாழ்வாதாரம் கேள்விக்குள்ளாகி உள்ளது.
கடந்த 20 நாட்களாக மூடிய நிலையில் உள்ள மலர் அங்காடி, காய்கறி அங்காடி பழ அங்காடி உள்ளிட்ட அனைத்து பகுதிகளை யும் சுத்தம் செய்து, கிருமி நாசினி தெளித்து மீண்டும் வியாபாரம் செய்ய அனுமதி அளிக்க வேண்டும் என்றனர். மொத்த வியாபாரம் மட்டும் நடந்தால் காய்கறிகளின் விலை குறையாது. இதனால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாவார்கள். சிறு மொத்த வியாபாரத்தை நம்பி 10 ஆயி ரத்திற்கும் மேற்பட்ட கூலித் தொழிலாளர்கள், சுமை தூக்கும் தொழிலாளர்கள் உள்ளனர். அவர்களின் வாழ்வாதாரமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. எனவே, முதலமைச்சர் இந்தப்பிரச்ச னையில் உடனடியாக தலையிட்டு சிறு மொத்த வியாபாரிகளின் நிலையை கருத்தில் கொண்டு கடைகளை ஒதுக்கீடு செய்து வியா பாரம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்தனர்.