tamilnadu

img

காய்கறி வரத்து குறைவால் 2 மடங்கு விலை உயர்வு

சென்னை, மே 6- சென்னையில் கோயம்பேடு சந்தை மூடப்பட்டதையடுத்து காய்கறி விலை 2 மடங்காக உயர்ந்துள்ளது. சென்னை கோயம்பேடு சந்தையில் கொரோனா தொற்று அதிகளவில் பரவத் தொடங்கியது. இதனையடுத்து சந்தை மே.5 அன்று மூடப்பட்டது. தற்காலிக சந்தை திருமழிசையில் அமைக்கப்பட்டு வருகிறது. எனவே, காய்கறி வரத்தை 10ந்  தேதி வரை வியாபாரிகள் நிறுத்தி வைத்துள்ளனர். இதனால் வெளிமாநிலங்கள், மாவட் டங்களில் இருந்து காய்கறி வரத்து குறைந்  துள்ளது. அதன் தாக்கமாக அவற்றின் விலை 2 மடங்காக உயர்ந்துள்ளது. வியாபாரிகள் தங்கள் இருப்பில் வைத்திருக்கும் இருப்பை வைத்தே காய்கறி விற்று வருவதாக வியாபாரிகள் தெரிவித்தனர். தொடர்ந்து காய்கறிகள் வரத்து இல்லையென்றால் சிறுசிறு காய்கறி சந்தைகள் மூடும் நிலை ஏற்ப டும் என்றும் அவர்கள் கூறினர். சென்னையில் புதனன்று (மே 6) கிலோ  வெங்காயம்  40 ரூபாய்க்கும், தக்காளி  40 ரூபாய்க்கும், பீன்ஸ்  200 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு 50 ரூபாய்க்கும், காலிபிளவர் 60 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டன. காய்கறி சந்தையில் தக்காளி, வெங்கா யம் மட்டுமே இருப்பதாகவும் அதுவும் கடு மையாக விலை உயர்ந்துள்ளதாகவும், பணமில்லாத இந்த சமயத்தில் காய்கறி விலை உயர்ந்திருப்பது பெரும் சிரத்தை உருவாக்கி இருப்தாக பொதுமக்கள் கூறினர்.