tamilnadu

img

மறைமுக தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி வி.சி.க மனு

சென்னை:
மாநகராட்சி, நகராட்சி, பேரூ ராட்சித் தலைவர் பதவிகளுக்கு, மறைமுக தேர்தல் நடத்த வழிவகை செய்து, கடந்த நவம்பரில் தமிழ்நாடு அரசு பிறப்பித்த அவசரச் சட்டத்திற்கு, தடை விதிக்க கோரி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், சென்னை உயர்நீதிமன்றத்தில், பொதுநல மனுத் தாக்கல் செய்திருக்கிறார்.அந்த மனுவில், மேயர் மற்றும் நகர்மன்ற தலைவர் ஒரு கட்சியைச் சேர்ந்தவர்களாகவும், பெரும்பான்மை உறுப்பினர்கள் வேறு கட்சியைச் சேர்ந்தவராகவும் இருந்தால், மன்றத்தை சுமூகமாக நடத்த முடியாது எனக்கூறி பிறப்பிக்கப்பட்ட அவசரச்சட்டம், அரசியலமைப்புக்கு எதிரானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

;