‘வந்தே பாரத்’ ரயில் மதுரை - பெங்களூரு சோதனை ஓட்டம்!
மதுரை, ஜூன் 17- மதுரை-பெங்களூரு இடையிலான ‘வந்தே பாரத்’ ரயில் சேவை விரைவில் தொடங்கவுள்ள நிலையில், அதற்கான சோதனை ஓட்டம் திங்களன்று (ஜூன் 17) நடைபெற்றது.
இந்நிலையில், இந்த சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற் றுள்ளதாகவும், இதைத்தொடா்ந்து, மதுரை - பெங்களூா் இடையே புதிய வந்தே பாரத் ரயில் சேவையை பிரத மர் மோடி விரைவில் தொடங்கி வைக்க வுள்ளதாக ரயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த ரயில் திண்டுக் கல், கரூர், சேலம், தருமபுரி, ஒசூர் வழி யாக இயக்கப்படவுள்ளது.
தெற்கு ரயில்வேயில் சென்னை - மைசூா், சென்னை - கோவை, சென்னை - திருநெல்வேலி, திருவனந்தபுரம் - காசர்கோடு, சென்னை - விஜயவாடா, கோவை - பெங்களூர் இடையே வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன.
வெள்ளங்குழி வெடிவிபத்து
ரூ.3 லட்சம் நிவாரணம் முதல்வர் அறிவிப்ப
சென்னை, ஜூன் 17- திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி வட்டம், பாமணி வருவாய் கிராமம், வெள்ளங்குழி (தேவேந்திரபுரம்) என்ற இடத்தில் இயங்கிவந்த தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் ஞாயி றன்று பிற்பகல் 1.45 மணியளவில் எதிர் பாராதவிதமாக வெடிவிபத்து ஏற் பட்டது.
இதில், சதீஷ்குமார் (34) பலத்த தீக்கா யங்களுடன் மன்னார்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரி ழந்தார்.
இந்நிலையில், சதீஷ்குமார் மறை வுக்கு வருத்தமும், வேதனையும் தெரி வித்துள்ள முதல்வர் மு.க. ஸ்டாலின், அவரது குடும்பத்தினருக்கு மூன்று லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளார்.
மீனவர் குடும்பங்களுக்கும் நிவாரணம் அறிவிப்பு
இதேபோல மீன்பிடிக்கச் சென்ற போது கடலில் மூழ்கிப் பலியான இராம நாதபுரம் மாவட்டம், பாம்பன் ஊராட்சி, அன்னை நகரைச் சேர்ந்த ஆரோக்கியம் (50), பரக்கத்துல்லா (45), கலீல் முஹம் மது (32) ஆகியோரின் மறைவுக்கும் இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர், இவர்களின் குடும்பங்களுக்கும் தலா ரூ. 3 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் 4 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும்!
வானிலை ஆய்வு மையம் தகவல்
சென்னை, ஜூன் 17- இந்தாண்டு கோடைக் காலம் மிக மோசமான முறையில் மக்களை வாட்டி வதைத்தாலும், கடந்த மாதத்தில் பெய்த கோடை மழை சற்று ஆசுவாசப்படுத்தி யது. அதன்பின்னர், கடந்த ஒரு வாரத் துக்கு மேலாக தமிழ்நாட்டில் மழைக் கான வாய்ப்பு எதுவும் இல்லாமல், மீண்டும் வெப்பம் வாட்டி வதைக்கத் தொடங்கி இருக்கிறது.
இதன் தொடர்ச்சியாக திங்கட் கிழமை முதல் வியாழக்கிழமை வரை (ஜூன் 17 முதல் 20 வரை) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதி களில் சில இடங்களில் 2 டிகிரி முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதாவது, 3 டிகிரி பாரன்ஹீட் முதல் 5 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பம் அதிகரித்து காணப்படும் என வானிலை ஆய்வு மையம் அறிவித் துள்ளது.
இடைத் தேர்தல் புறக்கணிப்பு
மேலிட உத்தரவால், அதிமுக எடுத்த முடிவு
ப.சிதம்பரம் குற்றச்சாட்டு
சென்னை, ஜூன் 17- பாஜக அணியில் உள்ள பாமகவுக்கு சிரமத்தை ஏற்படுத்தாமல் இருக்கவே இடைத் தோ்தலை அதிமுக புறக்க ணித்துள்ளதாக ஒன்றிய முன்னாள் அமைச்சர் ப. சிதம்பரம் குற்றம்சாட்டி யுள்ளார்.
இது குறித்து, அவர் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், “விக்கிரவாண்டி இடைத் தோ்தலை புறக்கணிக்கும் அதி முகவின் முடிவு, அங்கு போட்டியிடும் பாஜக அணியின் பாமக வேட்பாளருக்கு சிரமத்தை ஏற்படுத்தாமல் இருக்கும் வகையில், மேலிடத்தில் இருந்து வந்த உத்தரவால் எடுக்கப்பட்டுள்ளது.
பாஜகவும், அதிமுகவும் இடைத் தேர்தல் களத்தை, பாமக எனும் தங்க ளது பிரதிநிதி மூலம் எதிர்கொள்கின்றன. இந்தத் தோ்தலில் ‘இந்தியா’ கூட்டணி வேட்பாளரின் வெற்றியை உறுதி செய் வோம்” எனப் பதிவிட்டுள்ளார்.