வைகோ விடம் கி.வீரமணி நலம் விசாரிப்பு!
சென்னை,ஜூன் 8- தோள்பட்டையில் செய்யப்பட்ட ஓர் அறுவைச் சிகிச்சைக்குப் பின் உடல்நலம் பெற்று வரும் ம.தி.மு.க. பொதுச்செய லாளர் திராவிட வைகோ உடல்நலம் தேறி வருகிறார். அவரைத் தொலைப்பேசியில் தொடர்புகொண்டு, திரா விடர் கழகத் தலைவர் ஆசி ரியர் கி.வீரமணி தமது மகிழ்ச்சியை தெரிவித்தார். தெம்போடும், மகிழ்ச்சி யோடும் வைகோ உரை யாடியதாக திராவிடர் கழக செய்திக்குறிப்பு தெரி விக்கிறது.
விசாரணை கைதி சாவு
கடலூர், ஜூன் 8- கள்ளக்குறிச்சி மாவட்டம், திருநாவலூர் பெரியம்பட்டை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 42).
இவர் விசாரணை கைதியாக கடலூர் மத்திய சிறைச்சாலையில் இருந்து வந்தார். இந்த நிலையில் ஆறுமுகத்திற்கு நெஞ்சு வலி ஏற்பட்டதாக தெரி கிறது. இதன் காரணமாக கடந்த 5ஆம் தேதி முதல் கடலூர் அரசு மருத்துவ மனை சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை காலை அவர் உயிரிழந்தார். இது குறித்து புதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதிய விளம்பரத்தில் அக்ஷய்குமார்
சென்னை, ஜூன் 8- ஸ்டீல் டியூப் தயாரிப்பில் இந்தியாவில் முன்னணி நிறுவனமாக திகழும் ஏபிஎல் அப்பல்லோ ஸ்டீல் டியூப்ஸ் நிறுவனம், அதன் புதுமைமிக்க தயாரிப்பான வண்ணங்கள் பூசப்பட்ட புதிய ரூப் டப் மேற்கூரைக்கான விளம் பரத்தை அறிமுகம் செய்துள்ளது.
இதில் பிரபல இந்தி நடிகர் அக்ஷய் குமார் நடித்துள்ளார். க்ரேயன்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்த 60 விநாடி விளம்பரத்தில், ஏபிஎல் அப்பல்லோவின் ரூப் டப்பின் சிறந்த நீடித்த உழைப்பு மற்றும் வலிமையை வெளிப் படுத்தும் போது, பர பரப்பான சண்டைக் காட்சிகளில் ஈடுபடும் அக்ஷய்குமார் ‘தனது’ நடிப்புத்திறனை வெளிப் படுத்தி உள்ளார்.
விண்ணப்பங்கள் வரவேற்பு
கள்ளக்குறிச்சி ஜூன் 8 - சமூக சேவகர் விருதிற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் தகவல் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முதல மைச்சர் அவர்களால் ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தின விழாவில் போது பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த சமூக சேவகர் (ம) தொண்டு நிறு வனத்திற்கான விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இவ்விருந்துக்கு தகுதி யுடைய கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் தமிழக அரசின் விருதுகள் (http://awards.tn.gov.in) என்ற இணைய தளத்தில் ஜூன் 20க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரி விக்கப்பட்டுள்ளது.
திருத்தம்
நேற்றைய 7ஆம் பக்கத்தில் கடலுர் மாவட்டத்தில் பலத்த காற்றல் வாழை மரங்கள் சாய்ந்த செய்தியில் 1000 ஏக்கருக்கு பதி லாக 15 ஆயிரம் எக்கர் என்று தவறுதலாக வந்துள்ளது. தவறுக்கு வருந்துகிறோம். -ஆர்