tamilnadu

img

யுபிஎஸ்சி தேர்வு: 10 லட்சம் பேர் எழுதினர்

சென்னை,ஜூன் 2ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட இந்திய குடிமைப் பணிகளுக்காக முதல் நிலைத் தேர்வு நாடுமுழுவதும் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 2) நடைபெற்றது.மத்திய பணியாளர் தேர்வு வாரியம் (யுபிஎஸ்சி) சார்பில் நடைபெற்ற குடிமைப் பணிகளுக்கான முதல்நிலைத் தேர்வில் நாடு முழுவதிலும் சுமார் 10 லட்சம் பட்டதாரிகள் கலந்துகொண்டனர். நாடு முழுவதும் 72 நகரங்களில் இந்த தேர்வு நடைபெற்றது. தமிழகத்தில் சென்னை, வேலூர், திருச்சி, மதுரை ஆகிய நகரங்களில் சிவில் சர்வீஸ் தேர்வு நடைபெற்றது.முதல் நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு,நேர் காணல் ஆகிய 3 கட்டங்களைக் கடந்து 1 முதல் 2 சதவீதம் பேர்மட்டுமே தேர்ச்சி பெறுகின்றனர். முதல் கட்டத் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் முதன்மைத் தேர்வையும் அதில் தேர்ச்சி பெறுபவர்கள் நேர்காணலிலும் கலந்து கொள்ள முடியும்.  இதில் எந்த நிலையில் தோல்வி அடைந்தாலும் ஆரம்பத்தில் இருந்து முதல்கட்டத் தேர்வை எழுதவேண்டும்.