சென்னை:
சென்னை பல்கலைக்கழகத்திற்குட்பட்ட கல்லூரிகளில் கூடுதல் இடங்களை ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கம் சார்பில் துணைவேந்தரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு கல்லூரிகளிலும் 20 சதவீதம் கூடுதல் இடங்களை ஒதுக்கக்கோரி தமிழக அரசு சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. ஆனால் கல்லூரிகளில் கூடுதல் இடங்களை ஒதுக்காமல்பல கல்லூரிகள் சேர்க்கையை முடித்துள்ளன. குறிப்பாகசெங்கல்பட்டு அரசு கலை கல்லூரியில் மாணவர்கள் தலையிட்டு பேசியும் கூடுதல் இடங்களை ஒதுக்க மறுத்துள்ளது. எனவே சென்னை பல்கலைக்கழக நிர்வாகம் உடனடியாக தலையிட்டு சரிசெய்திட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துணைவேந்தர் மற்றும் பதிவாளரிடம் மனு கொடுக்கப்பட்டது. இந்நிகழ்வில் இந்திய மாணவர் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் க.நிருபன் சக்கரவர்த்தி, மாநிலசெயற்குழு உறுப்பினர் தீ.சந்துரு, செங்கல்பட்டு மாவட்டச்செயலாளர் மு.தமிழ்பாரதி, மாவட்டத் தலைவர் ந.சுந்தர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.