சென்னை, மார்ச் 19- ‘என்எல்சி இந்தியா’ நிறுவனத் தின் 7 சதவிகித பங்குகளை தனியா ருக்கு விற்கும் ஒன்றிய பாஜக அர சின் முடிவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித் துள்ளது.
இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் கே. பால கிருஷ்ணன் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது:
ரூ.2000 கோடி லாபம்; 25 ஆயிரம் பேருக்கு வேலை
தமிழகத்தின் கடலூர் மாவட் டம், நெய்வேலியில் 1956-ஆம் ஆண்டு துவங்கப்பட்ட என்.எல்.சி. (நெய்வேலி லிக்னைட் கார்ப்ப ரேஷன்) நிறுவனம் 2015-ஆம் ஆண்டு ‘என்எல்சி இந்தியா’வாக பெயர் மாற்றப்பட்டு, நாடு முழு வதும் சுரங்கங்கள் தெர்மல், சூரிய ஒளி, காற்றாலை ஆகியவற்றின் மூலம் சுமார் 6000 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் நவரத்தின நிறுவனமாகும்.
ஆண்டுக்கு சுமார் 2000 கோடிக்கு மேல் லாபம் ஈட்டும் நிறு வனமான என்எல்சி இந்தியாவில் 10 ஆயிரம் நிரந்தர பணியாளர் களும், 15,000 ஒப்பந்த தொழிலா ளர்களுமாக சுமார் 25,000 பேர் வரையிலும், நெய்வேலிக்கு வெளி யேயும் பல ஆயிரக்கணக்கான நிரந்தர ஒப்பந்த தொழிலாளர் களும் பணியாற்றி வருகின்றனர். மேலும், இது 50 ஆண்டுகளாக லாபத்தில் இயங்கி வருகிறது.
தனியாருக்கு சூறையாடும் ஒன்றிய ஆட்சியாளர்கள்
இந்நிலையில், 2002-ஆம் ஆண்டு 49 சதகிதம், 2006-ஆம் ஆண்டு 10 சதவிகிதம், 2013-ஆம் ஆண்டு 5 சதவிகிதம் என இந்நிறு வனத்தின் பங்குகளை விற்பனை செய்ய முயற்சித்த போது நெய் வேலி தொழிலாளர்களின் போராட் டத்தோடு தமிழகத்தின் அனைத்து அரசியல் இயக்கங்களும் ஒன்று சேர்ந்து குரல் கொடுத்ததன் விளைவாக பங்கு விற்பனை தடுக் கப்பட்டு, நிறுவனம் பாதுகாக் கப்பட்டது. 20 ஆண்டுகளாக நடை பெறும் தொடர் போராட்டம் மற்றும் எதிர்ப்புகளை மீறி சிறுக, சிறுக இரு பது சதவிகித பங்குகள் விற்கப் பட்டுள்ளன.
ரூ. 2 ஆயிரம் கோடிக்காக
நவரத்தின நிறுவனம் சூறை
தற்போது 7 சதவிகித பங்குகள், சலுகை விற்பனை என்ற அடிப்படை யில் ரூ. 226/- விலையுள்ள பங்கை ரூ.212/-க்கு விற்பதற்கு அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. உத்தேசிக்கப் பட்டுள்ள 9 கோடிக்கும் அதிக மான இப்பங்குகளை பெரும் கார்ப்பரேட் கம்பெனிகளால் தான் வாங்க முடியும். ரூ. 2000 கோடி நிதி தேவைக்காக, ஆண்டுக்கு ரூ. 2000 கோடி லாபம் ஈட்டி தரும் நவரத்தின அந்தஸ்து பெற்று விளங்கும் ஒரு நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்வது, படிப்படியாக இந்த ஒன்றிய பொதுத்துறை நிறுவனத்தைத் தனியார்மயமாக்கும் முயற்சியே என இந்திய கம்யூனிஸ்டு கட்சி (மார்க்சிஸ்ட்) குற்றம் சாட்டுகிறது. மோடி தலைமையிலான பாஜக அரசு, கார்ப்பரேட் ஆதரவு நவீன தாராளமய கொள்கைகளைத் தீவி ரமாகக் கடைபிடித்து வருவதன் ஒரு பகுதியே இது என சுட்டிக் காட்டுகிறது.
எனவே, இந்திய நாட்டின் மின் தேவையில் முக்கிய பங்கினை ஆற்றிடும் ‘என்எல்சி இந்தியா’ நிறு வனத்தின் 7 சதவிகிதப் பங்குகள் விற்பனை அறிவிப்பு நடவடிக்கை யை ஒன்றிய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என இந் திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க் சிஸ்ட்) வலியுறுத்துகிறது.
இவ்வாறு கே. பாலகிருஷ் ணன் தனது அறிக்கையில் குறிப் பிட்டுள்ளார்.