மின்வாரியங்களை தனியார்மயமாக்குவதை எதிர்த்து போராட்டம் நடத்திய தொழிற்சங்கத் தலைவர்களை கைது செய்த உத்தரப்பிரதேச மாநில அரசைக் கண்டித்து செவ்வாயன்று (செப்.29) சென்னை அண்ணாசாலையில் உள்ள மின்வாரிய தலைமையகம் முன்பு தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பின் தலைவர் தி.ஜெய்சங்கர், பொதுச் செயலாளர் எஸ்.ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.