tamilnadu

தீக்கதிர் முக்கிய செய்திகள்

ஒன்றிய பட்ஜெட் ஜூலை 27 இல் திமுக ஆர்ப்பாட்டம் 

சென்னை, ஜூலை 25-  2024-25 ஆம் ஆண்டுக்கான ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையில் தமிழ்  நாடு புறக்கணிக்கப்பட்டதைக் கண்டித்து  ஜூலை 27 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடை பெறும் என்று திமுக அறிவித்துள்ளது.
இது குறித்து திமுக சார்பில் வெளி யிட்டுள்ள அறிக்கையில், “ஒரு நாட் டின் நிதிநிலை அறிக்கை என்பது அனைத்து மாநிலங்களுக்கும் உரிய பங்கினை பகிர்ந்தளித்து நாடு முழு வதும் சமச் சீரான வளர்ச்சியை உரு வாக்க உதவுவதுடன், நாட்டில் வாழும்  கடைக்கோடி மனிதர்களின் வாழ்வை  மேம்படுத்தும் கொள்கை பிரகடனமா கவே இருக்க வேண்டும். ஆனால் இந்த  ஆண்டின் ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கை, ஒட்டுமொத்த இந்திய நாட் டிற்கான நிதிநிலை அறிக்கையாக தெரிய வில்லை.

மாறாக, தங்கள் ஆட்சியை காப்பாற்  றிக் கொள்வதற்காக சில மாநிலங்க ளுக்கு மட்டும் நிதியை தாராளமாக அள்  ளிக் கொடுத்தும், நாட்டின் வளர்ச்சியில் பெரும் பங்கு வகித்து வரும் தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் மீது வன்மத்தை கக்கிடும் வகையில் இந்த ஆண்டின்  ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கை அமைந்திருக்கிறது.

மெட்ரோ ரயில் திட்டத்திற்கான நிதி, தமிழ்நாடு சந்தித்த இரண்டு தொடர் பேரி டர் இழப்புகள் ஆகியவற்றிற்கு நிதி  வழங்க வேண்டுமென்று தமிழ்நாடு முதல மைச்சர் முன்வைத்த கோரிக்கைகளை முற்றிலுமாக புறக்கணித்து, சில மாநி லங்களுக்கு மட்டும் பேரிடர் நிதி அள்ளி  வழங்கப்பட்டுள்ளது.

நிதிநிலை அறிக்கையில் மாற்றாந் தாய் போக்குடன் தமிழ்நாட்டை வஞ் சித்த ஒன்றிய பாஜக  அரசைக் கண் டித்து ஜூலை 27 ஆம் தேதி காலை 10 மணிக்கு, மாவட்ட தலைநகரங்களில் திமுக சார்பில் “மாபெரும் ஆர்ப்பாட்  டம்” நடைபெறும் என்று தெரிவிக்கப்பட் டுள்ளது.

நீலகிரி, கோவைக்கு மஞ்சள் எச்சரிக்கை 

சென்னை, ஜூலை 25- 7 முதல் 11 செ.மீ., மழைக்கு வாய்ப்பு  உள்ளதால் நீலகிரி, கோவை மாவட்டங்க ளுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத் துள்ளது. 

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்  கால் பகுதிகளில் 7 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.

ஆக.2 இல் புதுச்சேரி பட்ஜெட் தாக்கல்

புதுச்சேரி, ஜூலை 25- புதுச்சேரி சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்  தொடர் ஆளுநர் உரையுடன் ஜூலை 31 அன்று துவங்குகிறது. ஆகஸ்ட் 2 அன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது என்று பேரவைத் தலைவர் செல்வம் அறிவித்துள்ளார்.

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் காரணமாக, கடந்த மார்ச் மாதம் புதுச் சேரியில் முழுமையான பட்ஜெட் தாக் கல் செய்யப்படவில்லை. அதற்கு பதி லாக இடைக்கால பட்ஜெட் மட்டும் தாக் கல் செய்யப்பட்டது. முழுமையான பட்  ஜெட் தாக்கல் செய்வதற்காக மாநில திட்டக்குழு கூட்டம் கடந்த மாதம் ஆளு நர் சி.பி.ராதாகிருஷ்ணன் தலைமையில் கூடியது.

புதுச்சேரி அரசின் ரூ.12 ஆயிரத்து 700  கோடி பட்ஜெட்டுக்கு ஒன்றிய உள்துறை,  நிதித்துறை அமைச்சகங்கள் அண்மை யில் அனுமதி வழங்கின.

இதைத்தொடர்ந்து பட்ஜெட் தாக்கல் செய்யும் கோப்புக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்தார். இதன்படி ஜூலை 31 ஆம் தேதி புதன்கிழமை காலை 9.30 மணிக்கு புதுவை சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குகிறது. 

ஆகஸ்ட் 2 ஆம் தேதி காலை 9.30  மணிக்கு நிதித்துறை பொறுப்பு வகிக்கும்  முதலமைச்சர் ரங்கசாமி பட்ஜெட் தாக் கல் செய்கிறார் என்றும் பட்ஜெட் கூட்டத்  தொடர் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பதை அலுவல் ஆய்வுக்குழு முடிவு செய்யும் என்றும் சட்டப்பேரவைத் தலை வர் செல்வம் ஜூலை 25 வியாழனன்று தெரிவித்தார். 

இலங்கையில் தமிழக மீனவர்களுக்கு  காவல் நீட்டிப்பு 

இராமநாதபுரம்,ஜூலை 25- இலங்கை சிறையில் அடைக்கப்பட் டுள்ள தமிழக மீனவர்கள் 13 பேருக்கு ஜூலை 29 வரை நீதிமன்ற காவல் நீட்டிக்  கப்பட்டது. 

புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாப்  பட்டினம் மற்றும் கோட்டைப்பட்டினத்தி லிருந்து 3 விசைப் படகுகளில் சென்ற 13 பேர் நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக்கூறி இலங்கை கடற்படையினரால் ஜூலை 11 அன்று 13 பேரும் கைது செய்யப்பட்டனர். இவர்  கள் யாழ்ப்பாணம் சிறையில் அடைக் கப்பட்டனர்.

இலங்கை ஊர்க்காவல்துறை நீதி மன்றத்தில் இந்த வழக்கு நீதிபதி ஷாலின் முன்பு வியாழக்கிழமையன்று விசார ணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, மீனவர்களின் காவலை ஜூலை  29 ஆம் தேதி வரை நீட்டித்து உத்தர விட்டார்.

தமிழ்ப் புதல்வன் திட்டத்திற்கு ரூ.401 கோடி நிதி ஒதுக்கீடு

சென்னை, ஜூலை 25- புதுமைப்பெண் திட்டம் போல உயர்  கல்வி பயிலும் மாணவர்களுக்கு மாதம்  ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டம் ஆகஸ்ட்டில்  தொடங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

அரசுப் பள்ளி (ஆங்கிலம் மற்றும்  தமிழ் மீடியம்), அரசு உதவி பெறும் பள்ளிகளில் (தமிழ் மீடியம் மட்டும்) படித்துள்ள மாணவர்கள் தங்களின் இளங்கலை பட்டம், தொழிற்பயிற்சி, பட்டயக் கல்வி ஆகியவற்றை பெறும் காலம் வரை ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கும் திட்டத்தை அரசு செயல்படுத்துகிறது.

இந்நிலையில் மாணவர்களுக்கு ரூ.1000 வழங்கும் தமிழ் புதல்வன் திட்டத்  துக்கு ரூ.401 கோடி ஒதுக்கீடு செய்து தமி ழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் பயின்று உயர் கல்வி பயி லும் மாணவர்களுக்கு ரூ.1000 வழங்கு வதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்  ளது. தமிழ் புதல்வன் திட்டத்தில் ரூ.1000  மாணவர்களின் வங்கி கணக்கில் வரவு  வைக்கப்படும்.தமிழ் புதல்வன் திட்டத்  தால் 3 லட்சத்து 20 ஆயிரம் மாணவர்கள் பயனடைவார்கள்.

இந்த திட்டம் முழுமையாக மாநில  அரசின் நிதியில் செயல்படுத்தப்படு கிறது. எனவே, இத்திட்டத்துக்கு ஆதார்  எண் மிகவும் அவசியமாகிறது. பய னாளிகள் கட்டாயம் ஆதார் எண் வைத்  துள்ளவராக இருத்தல் வேண்டும்.