சென்னை ,ஜூன் 13 எப்போதும் உட்கார்ந்து கொண்டு பணியாற்றும் சூழலும் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கமுமே அதிக உடல் எடைக்கு வழிவகுத்து நாள்பட்ட நோய்களுக்கு காரணமாக அமைந்து விடுகிறது என்று இரைப்பை குடல் அறுவை சிகிச்சை துறையின் மூத்த ஆலோசகர் டாக்டர் தீபக் சுப்பிரமணியன் கூறி யுள்ளார். சூளைமேடு நெல்சன் மாணிக்கம் சாலையில் அமைந்துள்ள எம்.ஜி.எம் ஹெல்த்கேர் மருத்துவமனை யில் உடல் பருமனை குறைக்க அதிநவீன சிகிச்சை நிலையம் தொடங்கப்பட்டு ள்ளது. இதனை பிரபல திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் திறந்துவைத்தார். இந்த நிகழ்ச்சியில் பேசிய டாக்டர் தீபக்,உடல் பருமன் குறித்த விழிப்புணர்வு இந்தியர்களிடம் போதுமான அளவு இல்லை என்றார். எனவே மக்களுக்கு அதீத உடல் பருமனால் ஏற்படும் விளைவுகள் குறித்து விளக்கவேண்டிய அவ சரத்தேவை ஏற்பட்டுள்ளது என்றார்.அதீத எடை ஒரு நோய் என்பதையும் அது நேரடியாக உயர் ரத்த அழுத்தம், இரண்டாம் வகை நிரீழிவு, அதித நிணநீர்க் கொழுப்பு நோய் மற்றும் இதய தமனி நோய்களுக்கும் காரணமாக அமையும் என்பதை அறியாமல் இருக்கின்றனர் என்றும் அவர் கூறினார். உணவுபழக்க வழக்கத்தில் மேற்கொள்ளப்படும் மாற்றங்கள் பயனளிக்காத நிலையில் பிஎம்ஐ அளவு 33 மற்றும் அதற்கும் மேல் உள்ள நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதாகவும் அவர் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் எம்.ஜி.எம் ஹெல்த்கேர் இயக்குநர் டாக்டர் பிரஷாந்த் ராஜகோபாலன், தலைமை செயல் அதிகாரி டாக்டர் ராகுல் மேனன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.