சென்னை, ஆக. 21 - தமிழ்நாட்டில் அரசு மருத்துவக் கல்லூரிகள், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் மொத்தம் 10 ஆயி ரத்து 462 எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். இடங்கள் உள்ளன. இதற்கான தர வரிசைப் பட்டியலில் 42 ஆயி ரத்து 236 மாணவர்கள் இடம் பெற்றுள் ளனர். இதன்மூலம் ஓரிடத்துக்கு 4 பேர் போட்டியிடும் நிலை ஏற்பட்டுள் ளது. இந்நிலையில், மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு மக்கள் நல்வாழ்வுத் துறை இணைய தளத்தில் புதன்கிழமை (ஆக.21) தொடங்கியது. தொடர்ந்து 2-ஆவது நாளான வியாழனன்று காலை 8 மணிக்கு விளையாட்டு வீரர்களுக் கும், 8.30 மணிக்கு முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு, 9 மணிக்கு மாற்றுத்திறனாளி மாண வர்களுக்கு கலந்தாய்வு நடக் கிறது. அதைத் தொடர்ந்து, காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை 7.5 விழுக்காடு உள் இட ஒதுக்கீடு இடங்களுக்கான கலந்தா ய்வு நடைபெற உள்ளது.
தொடர்ந்து, 27-ஆம் தேதி மாலை 5 மணி வரை மாணவர்கள் மருத்துவக் கல்லூரி இடங்களை தேர்வு செய்யலாம். 28-ஆம் தேதி தரவரிசைப் பட்டியல் அடிப்படை யில் கல்லூரிகளில் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும். தற்காலிக இடஒதுக்கீடு விவரங்கள் 29-ஆம் தேதியும், இறுதி இடஒதுக்கீடு விவ ரங்கள் 30 ஆம் தேதி இணை யதளத்தில் வெளியிடப்படும்.
ஆகஸ்ட் 30 முதல் செப்டம்பர் 5 நண்பகல் 12 மணி வரை இட ஒதுக்கீடு ஆணையை இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். செப்டம்பர் 5-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் இட ஒதுக்கீடு பெற்று கல்லூரியில் சேர வேண்டும்.