கள்ளக்குறிச்சி, ஜூன் 2- கொரோனா தொற்று பரவாமல் தடுக்க பொதுமுடக்கம் அமல்ப டுத்தப்பட்டதால் கட்டுமான தொழிலா ளர்கள் வாழ் வாதாரதை இழந்துள்ள னர். எனவே அனைத்து கட்டுமான தொழிலாளர்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சுமார் 2 லட்சம் பேர் கட்டுமானம் தொடர்பான தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர். கொரோனா தொற்று காரணமாக நாடெங்கும் பொது முடக்கம் 5ஆம் கட்டமாக நீடிக்கப் பட்டுள்ள நிலையில் பெருவாரி யான தினக்கூலி மற்றும் ஏழை, எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளனர். தினசரி வேலைக்கு சென்று கிடைக்கக்கூடிய குறைந்த பட்ச வருவாயில் ஜீவனத்தை ஓட்டி வந்த இவர்களின் வாழ்வா தாரம் முடங்கிப் போயுள்ளது. இந்நிலையில் அரசு அறிவித்துள்ள நிவாரண உதவித் தொகையும் கிடைக்குமா அல்லது “சொப் பனத்தில் கண்ட அரிசி சோற்றுக்கு ஆகுமா” என ஏக்கத்துடன் காத்தி ருக்கும் நிலை நிலவுகிறது.
வெங்காய வெடி போல
53 தொழில் புரிவோரை இணைத்து உருவாக்கப்பட்டுள்ள கட்டுமான நலவாரிய நிதியிலிருந்து ஏப்ரல், மே மாதங்களுக்கு சேர்த்து 2 ஆயிரம் ரூபாய் நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளது எனவும், 17 அமைப்புசாரா தொழிலாளர்கள் நல வாரியம் சேர்த்து 35 லட்சத்து 65 ஆயி ரம் குடும்பங்களுக்கு தலா 1,000 வீதம் ஒருமுறை வழங்கப்பட்டது போல மீண்டும் வழங்க உத்தரவிட்டுள்ள தாக தமிழக முதல்வர் மே 30ஆம் தேதி அறிவித்துள்ளார். ஆனால் இந்த அறிவிப்பு சத்தம் மட்டும் அதிகமாக உள்ள “வெங்காய வெடிபோல” உள்ளதாக இப்பலன் கிடைக்காத தொழிலாளர்கள் கூறு கின்றனர். கள்ளக்குறிச்சி விழுப்புரம் உள்ளிட்ட இரு மாவட்டங்களையும் இணைத்து விழுப்புரத்தில் உள்ள நல வாரிய அலுவலகத்தில் இது வரை சுமார் 56 ஆயிரம் பேருக்கு மட்டுமே நிவாரண நிதி அனுப்பப் பட்டுள்ளதாகவும், மேலும் சுமார் 5 ஆயிரம் பேருக்கு அனுப்ப உள்ளதாக வும் கூறுகின்றனர்.
வாரியத்தில் பதிவு செய்ய கிராம நிர்வாக அலுவலரின் கையொப்பம் பெற்று வர வேண்டும் என்ற சூழலில் வாரியத்தில் பதிவு செய்ய இயலாத கட்டுமானத் தொழிலாளர்கள் ஏராள மானோர் உள்ளனர். இந்நிலையில் எவ்வாறு அனைத்து கட்டுமானத் தொழிலா ளர்களுக்கும் நிவாரண நிதி கிடைக்கும். மேலும் சிமெண்ட், கம்பி உள்ளிட்ட கட்டுமான பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ள சூழலில் மணலும் தட்டுப்பாட்டுடன் இருப்பதால் வீடுகளில் முடங்கிக் கிடக்கின்றனர் கட்டுமான தொழி லாளர்கள்.
தனி வாரிய அலுவலகம்
எனவே பொதுமுடக்கம் முடிவ டைந்த பின்பு குறிப்பிட்ட கால அவ காசம் அளித்து அவர்களின் பதிவை புதுப்பித்து அவர்களுக்கு கிடைக்க வேண்டிய ஓய்வூதியம் உள்ளிட்ட அனைத்து பயன்களையும் வழங்க வேண்டும். புதிதாக உருவாக்கப் பட்ட கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தனியாக மாவட்ட கட்டுமான தொழி லாளர் நல வாரிய அலுவலகம் உட னடியாக அமைக்க வேண்டும், நிவா ரண உதவி தொகை 2000 ரூபாய் அனைத்து கட்டுமான தொழிலாளர்க ளுக்கும் வழங்க வேண்டும், கடந்த 3 மாதங்களில் வழங்காமல் உள்ள ஓய்வூதியத்தை முழுமையாக வழங்க வேண்டும், நியாயவிலைக் கடையில் விடுபட்ட மாதங்க ளுக்கான அனைத்து பொருட்களும் வழங்க வேண்டும் என கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் (சிஐடியு) கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் எஸ்.சேகர் வலியுறுத்தியுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் மட்டு மல்லாமல் தமிழகம் முழுவதும் நில வும் இப்பிரச்சினைகள் மீது மத்திய, மாநில அரசுகள் கவனம் செலுத்த வேண்டும். “ஜோதி இல்லா வான மும், நீதி இல்லை அரசனும் இருந்தும் பயனில்லை” என்பதைப் போல முதல்வரின் அறிவிப்புகள் ஆகிவிடக் கூடாது. அப்பாவி தொழிலாளர்கள் பாதிக்கப்படாமல் அனைவருக்கும் பலன்களை வழங்க உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும்.