பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகளை தள்ளி வைக்க கோரி பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனை தலைமை செயலகத்தில் சந்தித்து திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மனு அளித்தார். இந்த சந்திப்பின் போது திமுக மாணவரணி செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன், சட்டமன்ற உறுப்பினர்கள் தாயகம் கவி, ஆர்.டி.சேகர் ஆகியோர் உடனிருந்தனர்.