சென்னை, டிச.9-
தமிழகத்துக்குள் டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை எக்காரணம் கொண்டும், அனுமதிக்க மாட்டோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
இந்துஸ்தான் ஜிங்க் நிறு வனத்துக்கு வழங்கப்பட்ட டங்ஸ்டன் சுரங்க உரிமத்தை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தி கொண்டுவரப் பட்ட அரசினர் தனித் தீர்மானத்தின் மீது தமிழ்நாடு சட்டப் பேரவையில் நடந்த விவாதத்தில் எதிர்க்கட்சித் தலை வர் எடப்பாடி பழனிசாமி பேசுகை யில், “ஒன்றிய அரசு இந்த ஆண்டு டங்ஸ்டன் சுரங்கத்துக்கு ஒப்பந்தப் புள்ளி வெளியிட்டு, இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்தின் உரிமம் இறுதி செய்யப்படும் வரை தமிழ்நாடு அரசு அமைதியாக இருந்துள்ளது.
மாநில அரசின் கோரிக்கையை ஒன்றிய சுரங்கத்துறை நிராகரித்ததாக வந்த செய்தி மதுரை மாவட்ட மக்க ளுக்கு சென்றடைந்து அப்பகுதி மக்கள், ஆர்ப்பாட்டத்திலும், போராட்டத்திலும் ஈடுபட்டதால், டங்ஸ்டன் சுரங்கத்துக்கு எதிராக தனித் தீர்மானம் கொண்டு வரப்பட்டது” என குற்றம் சாட்டினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, அவை முன்னவர் துரைமுருகன் ஆகியோர் பதிலளித்தனர்.
சு.வெங்கடேசன் தனித் தீர்மானம்
தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிசாமி, மக்களவையில் ஒன்றிய அரசு சட்டம் கொண்டு வந்தபோது திமுக மற்றும் அதன் கட்சி எம்பிக்கள் எதிர்த்து குரல் கொடுக்கவில்லை என்றும் போதிய அழுத்தம் தரவில்லை என்றும் கூறினார்.
அப்போது குறுக்கிட்டு பேசிய பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி, டங்ஸ்டன் திட்டத்தை ஒன்றிய அரசு கைவிட வலியுறுத்தி மதுரை மக்க ளவை தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி உறுப்பினர் சு.வெங்க டேசன் தனித் தீர்மானம் கொண்டு வந்ததை சுட்டிக்காட்டினார். மேலும், ஒரு பிடி மண்ணை கூட அனுமதிக்க மாட்டோம் என்று மதுரை மக்கள் போராட்டம் நடத்துவதையும், அந்த மக்களை சந்தித்த போது அதிமுக எம்எல்ஏ பெரியபுள்ளான் உடன் இருந்த தையும் விளக்கமாக தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து, எதிர்க்கட்சித் தலைவரின் குற்றச்சாட்டுக்கு பதி
லளித்து பேசிய முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர், “நாடாளுமன்றத்தில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி எம்.பிக்கள் என்ன செய்தீர்கள்?” என்று ஒரு கேள்வியைக் கேட்டார். நாடாளு
மன்றத்தில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி எம்.பி.க்கள், இதுதொடர்பான திருத்தச் சட்டத்தை கடுமையாக எதிர்த்துள்ளனர்.
இந்த விவகாரத்தில் எங்களு டைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடுமையாக இதை எதிர்த்துள்ளனர். அதுமட்டுமல்ல, மதுரையில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டபோது, அமைச்சர் மூர்த்தி அங்கு சென்று உங்களுக்கு ஆதரவாக இந்த அரசு இருக்கும் என்று உறுதி அளித்திருந் தார். இதுதொடர்பாக முதல்வர் கடிதம் எழுதியிருக்கிறார் என்ற விவரத்தைக் கூறி, சட்டமன்றத்தில் தனித் தீர்மானம் கொண்டு வரப் போகிறோம் என்பதை யும், அங்கு போராட்டத்தில் ஈடுபட்ட வர்களிடம் தெரிவித்து வந்தார்.
இந்த சட்டத்திருத்தம் கொண்டு வந்த போது, நாங்கள் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறோம். அது நாடாளு மன்றத்தில் பதிவாகியிருக்கிறது. ஒன்றிய அரசு நிறைவேற்றிய சட்டத்தை எங்களால் எப்படி தடுத்திருக்க முடி யும்? ஒன்றிய அரசு பெரும்பான்மை யாக இருக்கும்போது எப்படி அவ்வாறு செய்ய முடியும்? எதிர்க்கட்சித் தலைவரும், காவிரி விவகாரத்தில் அதிமுக குரல் கொடுத்ததாகவும், சபை யை நடக்கவிடாமல் செய்ததாகவும் பலமுறை கூறியிருக்கிறார். அப்போது ஒன்றிய அரசு நிறைவேற்றிய தீர்மா னத்தை அதிமுக தடுத்து நிறுத்தி விட்டதா?
இந்த விவகாரத்தில், காலதாமதம் செய்துவிட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் பேசியிருக்கிறார். அவர்கள் பார்வையில் அவ்வாறு இருக்கலாம். நாங்கள் தவறிவிட்டதாக கூட இருக்கலாம். இந்த விவகாரத்தை நாங்கள் அவ்வாறு செய்யவில்லை. அவ்வப்போது நாங்கள் இந்த பிரச்சனையை சுட்டி காட்டியிருக் கிறோம், கடிதம் எழுதியிருக்கிறோம். அதனால்தான், நான் திரும்பத்திரும்ப கூறுகிறேன், எக்காரணத்தைக் கொண்டும், தமிழகத்துக்குள் டங்ஸ்டன் சுரங்க திட்டம் வரக்கூடிய வாய்ப்பே இல்லை. அதை தடுத்து நிறுத்து வோம். ஒருவேளை டங்ஸ்டன் சுரங்கம் வந்தால், இந்த முதல்வர் பொறுப்பில் நான் இருக்கமாட்டேன். எனவே, இந்த தனித் தீர்மானத்தை நிறைவேற்றித் தரு மாறு கேட்டுக் கொள்கிறேன் என்றார்.
அப்போதும்-இப்போதும் எதிர்க்கிறோம்
டங்ஸ்டன் திட்டம் குறித்து கடிதம் எழுதிய ஒன்றிய அமைச்சருக்கு, ஆரம்பத்தில் இந்த திட்டம் எங்க ளுக்கு தேவையில்லை என்று நமது நீர்வளத்துறை அமைச்சர் கடிதம் எழுதி யிருந்தால் அந்த திட்டம் வந்திருக்காது என்று பாஜக சட்டமன்ற தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார்.
இதற்கு பதிலளித்து பேசிய நீர்வளத்துறை அமைச்சர் முருகன், ஒன்றிய அரசிடமிருந்து கடிதம் வந்த உடனே, இதனால் மாநில அரசின் உரிமை பறிபோகும் என்பதால், இதுபோன்ற அதிக முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகளில் மாநில அரசுகளை கலந்து ஆலோசிக்க வேண்டும். டங்ஸ்டன் சுரங்கத்திற்கு அனுமதி கொடுப்பதா? இல்லையா? என்ற அதிகாரம் மாநில அரசுக்கு மட்மே உள்ளது என்பதையும் கடிதம் மூலம் தெரிவித்தோம் என்றார்.
நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, ஒன்றிய அரசிடம் இருந்து கடிதம் வந்ததும், பல்லுயிர் பெருக்கம் உள்ளிட்ட அனைத்தும் விவரம் தெரி வித்து அனுமதி கூடாது என்று தெரி வித்தோம். ஆனால், தமிழ்நாட்டின் எதிர்ப்பையும் மீறி தங்களுக்கு பெரும்பான்மை பலம் இருக்கிறது என்பதால் மக்களவையில் சட்ட திருத்தம் கொண்டு வந்துள்ளது ஒன்றிய அரசு. அதன் பிறகு, முதலமைச்சர் கடி தம் எழுதினார். ஆனால், ஒன்றிய அர சின் மனதில் என்ன இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை. தமிழக அரசை பொறுத்தவரை, அப்போதும் எதிர்த்தோம் இப்போதும் எதிர்க்கிறோம் என்றார். .
குழம்பிய நிலையில் பாஜக
தொடர்ந்து பேசிய நயினார் நாகேந்திரன், கனிம வளங்களை பாது காக்க ஒன்றிய அரசு நாடு முழுமைக்கு மான ஒரு சட்டத்தை கொண்டு வந்தது. தமிழ்நாட்டிற்காக தனியாக கொண்டு வரமுடியாது. பொதுமக்களை பாதிக்கும் பிரச்சனைகளுக்கு தமிழ் நாடு பாஜக துணை நிற்கும் என்றார்.
மீண்டும் குறுக்கிட்ட அமைச்சர் துரைமுருகன், மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க ஒன்றிய அரசு ஏலம் விட்டுள்ளதால் பொது மக்கள் பாதிக்கிறார்கள். இதில் உங்கள் நிலை என்ன? என்று கேட்டார்.
அதற்கு நேரடியாக பதில் அளிக்க முடியாமல் திக்குமுக்காடிய நயினார், ஒன்றிய அமைச்சரிடம் பேசி யிருக்கிறோம். நல்ல முடிவு வரும் என்றார். அப்போது குறுக்கிட்ட முத லமைச்சர், தமிழ்நாடு அரசு கொண்டு வந்திருக்கும் தீர்மானத்திற்கு ஆதரவு? உண்டா இல்லை? என்பதை ஒற்றை வரியில் கூறவும் என்றார். அப்போது, நாங்கள் ஏற்கெனவே பேசியிருக் கிறோம். அந்த பகுதி மக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் நல்ல செய்தி வந்து சேரும் என்று அவர், தமிழ்நாடு அரசு கொண்டு வந்திருக்கும் தீர்மானத்தை ஆதரிக்கிறோம் அல்லது எதிர்க்கிறோம் என்று எதையும் சொல்லாமல் நழுவினார் நாகேந்திரன். தமிழக பாஜகவின் நிலைபாடு என்ன? என்பதை கடைசி வரைக்கும் கூறமுடியால் தவித்ததால் பேரவையில் சிரிப்பலை எழுந்தது.