tamilnadu

img

தமிழக கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முதுபெரும் தலைவர் அப்துல் வஹாப் உள்ளிட்டோருக்கு அஞ்சலி

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)யின் தமிழ்நாடு மாநிலக்குழுக் கூட்டம்
பிப்ரவரி 10,11 ஆகிய தேதிகளில் சென்னையில், மத்தியக்குழு உறுப்பினர் தோழர்
அ. சவுந்தரராசன் தலைமையில் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் அரசியல்
தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கே.
பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் கே. வரதராசன், பி. சம்பத்,
உ.வாசுகி மற்றும் மாநில செயற்குழு, மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்து
கொண்டனர். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.

தமிழக கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முதுபெரும்தலைவர்களில் ஒருவரும்,
கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினராகவும், தீக்கதிர் நாளேட்டில்
மேலாளராகவும் பணியாற்றிய  அப்துல் வஹாப் மறைவிற்கும்;
முற்போக்கு எழுத்தாளரும், சாகித்திய அகடாமி விருதுபெற்றவரும், மார்க்சிஸ்ட்
கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தோழர்களில் ஒருவருமான டி. செல்வராஜ்
மறைவிற்கும்; தேனி மாவட்ட வி.தொ.ச. மாவட்ட தலைவரும், கட்சியின்
மாவட்ட செயற்குழு உறுப்பினருமான எஸ். மொக்கராஜ் மறைவிற்கும்;
கட்சியின் இராமநாதபுரம் மாவட்டக்குழு உறுப்பினர் குணசேகரன்
மறைவிற்கும்; முதுகுளத்தூர் சண்முகவேல் மறைவிற்கும்; மாணவ
பருவத்தில் இந்திய மாணவர் சங்கத்தின் தலைவர்களில் ஒருவராக விளங்கி,
அரசு மருத்துவர்களின் கோரிக்கைகளுக்காக அயராது போராடிய டாக்டர் லட்சுமி
நரசிம்மன் மறைவிற்கும்; கர்நாடக தலைவர், அகில இந்திய தமிழ்ச்சங்கத்தின்
துணைத் தலைவருமான புகழேந்தி மறைவிற்கும் மாநிலக்குழு கூட்டத்தில்
அஞ்சலி செலுத்தப்பட்டது.

;