tamilnadu

img

காலிப் பணியிடங்களை நிரப்புக போக்குவரத்து ஊழியர் சங்கம் வலியுறுத்தல்

காலிப் பணியிடங்களை நிரப்புக  போக்குவரத்து ஊழியர் சங்கம் வலியுறுத்தல்

போக்குவரத்து ஊழியர் சங்கம் வலியுறுத்தல்

சென்னை, ஜூன் 10- அரசாங்க போக்கு வரத்து ஊழியர் சங்கத்தின் 58ஆம் ஆண்டு பேரவை கூட்டம் ஜூன் 9, 10 தேதிகளில் தோழர் பக்தவச்சலம் நினைவரங் கில் (திருவிக நகரில்) தலை வர் ஆர்.துரை தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவர் கே.சுப்பிரமணி சங்கக் கொடியை ஏற்றி னார். துணைப் பொதுச் செயலாளர் எம்.ரவிசங்கர் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். பொதுச்செயலாளர் வி.தயானந்தம் வேலை அறிக்கையையும், பொரு ளாளர் ஏ.ஆர்.பாலாஜி  வரவு-செலவு அறிக்கை யையும் சமர்ப்பித்தனர். சிஐடியு வடசென்னை மாவட்டத் தலைவர் எஸ்.கே.மகேந்திரன், மத்திய சென்னை மாவட்டச் செய லாளர் சி.திருவேட்டை, தென் சென்னை மாவட்டச் செயலா ளர் சி.பாலகிருஷ்ணன், மாநகர போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் தலைவர் டி.குரு சாமி, சாலை போக்குவரத்து சம்மேளனத்தின் அகில இந்திய துணைச் செய லாளர் வி.குப்புசாமி ஆகி யோர் வாழ்த்திப் பேசினர். தமிழ்நாடு அரசு போக்கு வரத்து ஊழியர் சம்மேள னத்தின் பொதுச்செயலாளர் கே.ஆறுமுக நயினார் பேர வையை நிறைவு செய்து பேசினார். முன்னதாக துணைத்தலைவர் ஐ.கே.மணி வரவேற்றார். அயன் புரம் கமிட்டி செயலாளர் ஆர்.பிரேம்குமார் நன்றி கூறி னார். தீர்மானங்கள் மருத்துவ விடுப்பு கேட்கும் தொழிலாளர்களை அலைகழிக்கும் போக்கை கைவிட வேண்டும், பரா மரிப்பு பிரிவில் தொழில் நுட்ப பணியாளர்களுக்கு புதிய அதிநவீன கருவிகளை வழங்க வேண்டும், கேண்டி னில் தரமான உணவு வழங்க வேண்டும், தொழிலாளர் பிரதிநிதி, அதிகாரிகள் கமிட்டி அமைக்க வேண்டும், பணியின் போது ஓட்டுநர், நடத்துநர் சமூகவிரோதிகள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் தாக்குதல் களை தடுத்து நிறுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், கண்ட்ரோல் பிரி வில் பரிசோதகர்களை நிய மிக்க வேண்டும்,  பயோ மெட்ரிக் முறையை ஓட்டு நர் நடத்துநர்களுக்கும் அமல்படுத்தி வருகைப் பதிவு ஓடி-யை (கூடுதல் பணி ஊதியம்) முறைப்படுத்த வேண்டும். நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த வேண்டும், லோக் அதாலத் மூலம் சம ரசம் செய்துகொள்ள நட வடிக்கை எடுக்க வேண்டும், அனைத்து பிரிவில் உள்ள காலிப் பணியிடங்களையும் முழுமையாக நிரப்ப வேண்டும், இ-பேருந்து களை தனியாரிடம் ஒப்ப டைக்காமல் அரசே நிரந்தர பணியாளர்களைக் கொண்டு இயக்க வேண்டும், சென்னையில்; மினி பேருந்து களை அரசே இயக்க வேண்டும், பணியில் உள்ள தொழிலாளர்களுக்கு டிஏ  அலவன்ஸ் இஎல் சரண்டர் போன்றவற்றை வழங்க வேண்டும், 2023 முதல் ஓய்வுபெற்ற தொழிலா ளர்களுக்கு நிலுவையில் உள்ள பணப்பலன்களை உடனே வழங்க வேண்டும், ஓய்வுபெற்ற தொழிலாளர் களுக்கு டிஏ உயர்வை முழு மையாக வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மா னங்கள் நிறைவேற்றப் பட்டன. நிர்வாகிகள்தேர்வு தலைவராக ஆர்.துரை, பொதுச்செயலாளராக வி.தயானந்தம், பொரு ளாளராக ஏ.ஆர்.பாலாஜி உள்ளிட்ட 35 நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.