ராணிப்பேட்டை மாவட்டத்தில் திருநங்கைகள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் (ஜூன். 21) நடைபெற்றது. இந்த குறைதீர் கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் ச. வளர்மதி பங்கேற்கவில்லை. மேலும் திருநங்கைகளுக்கான கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்பதை கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்று நடுரோட்டில் வாகனங்களின் முன்பாக படுத்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.