சென்னை, மார்ச் 2- சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ பணிகள் நடைபெற்று வருவ தால் அவ்வப்போது போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி சென்னை மெட்ரோ ரயில் பணிகள் காரணமாக அண்ணா நகர், நுங்கம்பாக்கம், ஸ்டெர்லிங் ரோடு பகுதிகளில் ஞாயிறன்று மட்டும் சோதனை அடிப்படையில் போக்கு வரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
இது தொடர்பாக சென்னை போக்கு வரத்துத் காவல் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களின் கட்டுமான பணிக்காக அண்ணா மேம்பாலம் மெட்ரோ ரயில் நிலையம், நுங்கம் பாக்கம் மெட்ரோ நிலையம் மற்றும் ஸ்டெர்லிங் சாலை மெட்ரோ ரயில் நிலையம் ஆகிய இடங்களில் ஞாயிறு (மார்ச் 3) ஒரு நாள் மட்டும் போக்கு வரத்து மாற்றங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி சேத்துப்பட்டில் இருந்து ஜெமினி மேம்பாலம் நோக்கி வரும் வாகனங்கள் காலேஜ் ரோடு ஹாடோஸ் ரோடு உத்தமர் காந்தி சாலை வழியாக ஜெமினி மேம் பாலத்தை அடையும் வகையில் திருப்பி விடப்படும். இந்த மாற்றுப்பாதை ஒரு வழிப்பாதையாக செயல்படுத்தப் படும்.
ஜெமினி மேம்பாலத்தில் இருந்து வரும் வாகனங்கள், உத்தமர் காந்தி சாலை டாக்டர் எம்ஜிஆர் சாலை (பாம்குரோவ் ேஹாட்டல் உள்ள சாலை) வழியாக வள்ளுவர் கோட்டம் நோக்கி சென்று தங்கள் இலக்கை அடையலாம்.
அமைந்தகரை நோக்கிச் செல்லும் வாகனங்கள் டேங்க் ஃபண்ட் சாலை யில் (இடது பக்கம்) திரும்பி நெல்சன் மாணிக்கம் சாலை வழியாக அமைந்தக் கரை மற்றும் பிற இடங்களுக்குச் செல்லலாம்.
வள்ளுவர் கோட்டத்தில் இருந்து ஜெமினி மேம்பாலம் நோக்கிச் செல்லும் அனைத்து வாகனங்களும் வள்ளுவர் கோட்டம் சந்திப்பில், வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலை உத்தமர் காந்தி சாலை வழியாகத் திருப்பி விடப்பட்டு தங்கள் இலக்கை அடையலாம்.
மற்ற பிற உட்புற சாலைகள் அனைத் தும் மேற்கண்ட ஒரு வழிப்பாதை போக்குவரத்து மாற்றத்திற்கு தகுந்த படி போக்குவரத்து மாற்றப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.