சென்னை,ஜன.9- சென்னை மாவட்டத்தின் தொழிற்சங்க முன்னோடியான தோழர் பி.என்.உண்ணி உடல் நலக்குறைவால் செவ்வாயன்று (ஜன.9) காலமானார். அவருக்கு வயது 77. கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் பட்டாம்பியில் பிறந்தவர் பயநாடு நாராயணன் உண்ணி. சென்னைக்கு வந்த பிறகு, பி.என். உண்ணி என்ற பெயரில் தொழிலாளர் களின் உளவியல் அறிந்து சங்கம் வளர்த்தார். ஏழை எளிய மக்களுக்காகவும் உதிரி தொழிலாளர்களின் நலனுக் காகவும் தனது வாழ்நாள் முழுவதும் களப்பணியாற்றினார்.
சென்னையின் தொழிற்சங்க அடையாளமாக கருதப்பட்ட அவர், தொழிலாளர்களை போர்க்குணத்துடன் வளர்த்தெடுத்தார். அம்பத்தூர் பொதுத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர், சிஐடியு வட சென்னை மாவட்ட தலைவர், செயலா ளர், டேப்லெட் இந்தியா கம்பெனியில் யூனியன் தலைவராக பணியாற்றினார். தொழிற்சங்க முன்னோடிகளான வி.பி.சிந்தன், ஹரிபட், உரா.வரத ராசன், மூத்தத் தலைவர்கள் டி.என். நம்பிராஜன், ஏ.ஜி.காசி நாதன், அ. சவுந்தரராசன் ஆகியோருடன் இயக்கப் பணியாற்றியவர்.
ரயில்வே தொழிலாளர்கள், அம்பத்தூர் தொழிற்பேட்டை ராக் வெல்டு (வெல்டிங் ராடு) ஆலையில் தனது மனைவி கவுரியுடன் இணைந்து பணியாற்றிய போது தொழிலாளர் களை ஒருங்கிணைக்கும் சங்க வேலையும் மேற்கொண்டார். அந்த கம்பெனியில் வி.பி.சிந்தன் தொழிற் சங்கத் தலைவராகவும் வே.மீனாட்சிசுந்தரம் செயலாளராக வும் இருந்தபோது தோழர் பி.என்.உண்ணியும் நிர்வாகியாக செயல் பட்டார். அப்போது, உண்ணியை அழைத்து பேசிய ஆலை நிர்வாகம், போராட்டம் நடத்தாமல் இருந்தால் கம்பெனியின் மேலாளர் பதவி வழங்கு வதாக கூறியது. அதனை தனது இடது புறங்கையால் நிராகரித்தார். போர்க்குணம் மிக்க தலைவராக பரிணமித்த அவர் மலையாள இலக்கிய இதழ் சிந்தா, மற்றும் தேசாபி மானி பத்திரிகையை தொடர்ந்து வாசித்து தொழிலாளர்களுக்கு அரசியல் மற்றும் இலக்கிய வகுப்புக் களை எடுப்பதில் வல்லவராக திகழ்ந்தார். 1982 ஜன 19ல் நாடு தழுவிய பொதுவேலை நிறுத்தத்தில் பங்கேற்றதால் சிறையில் அடைக்கப் பட்டார். தனது குடும்பத்தார் அனைவரை யும் மார்க்சியம் அரசியல் புரிதலோடு வளர்த்தார். அவர் சிபிஎம் மற்றும் சிஐடியு சங்கத்தில் உறுதியோடு செயல்பட்டதற்கு உறுதுணையாக இருந்தவர் மனைவியும் பெண்ணிய போராளியுமான பி.எம்.கவுரி. தோழர் உண்ணிக்கு, பிரபு என்ற மகனும் சுனிதா என்ற மகளும் உள்ளனர்.
அவரது மருமகன் எஸ்.ராமச்சந்திரன் வடசென்னை மாவட்ட தீக்கதிர் நிருபராக பணியாற்றி வருகிறார். சிறுநீரக கோளாறால் அவதிப்பட்ட அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. இதையடுத்து, சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி செவ்வாயன்று (ஜன.9) பிற்பகல் உயிரிழந்தார்.
மருத்துவமனையில் வைக்கப் பட்டிருந்த உண்ணியின் உடலுக்கு கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மத்திய குழு உறுப்பினர் சம்பத், வடசென்னை மாவட்டச் செயலாளர் எல்.சுந்தர ராஜன் ஆகியோர் மலர் அஞ்சலி செலுத்தினர். அம்பத்தூர், மேட்டுத் தெரு, 10 வது குறுக்குத் தெரு, கதவு எண்.89\2ல் உள்ள அவரது இல்லத்தில் பொது மக்கள் அஞ்சலிக்காக உடல் வைக்கப் பட்டுள்ளது. புதனன்று (ஜன.10)காலை 11 மணிக்கு டன்லப் சுடுகாட்டில் தகனம் செய்யப்படுகிறது.
சிஐடியு மாநிலக்குழு அஞ்சலி
தோழர் பி.என். உண்ணி மறைவுக்கு சிஐடியு மாநில தலைவர் அ.சவுந்தர ராசன், பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன் ஆகியோர் விடுத்திருக்கும் அறிக்கையில், “ ஒன்றுபட்ட சென்னை மாவட்ட தொழிற்சங்க இயக்கத்தின் குறிப்பிடத்தகுந்தவ ராக இருந்தவர் தோழர். பி.என்.உண்ணி. அம்பத்தூர் தொழிற்பேட்டையில் அம்பத்தூர் ெஜனரல் ஒர்க்கர்ஸ் யூனியன் பொதுச்செயலாளராக, தலைவராக 30 ஆண்டுகளுக்கு மேலாக தொழிலாளர்கள் சங்க ரீதியாக திரட்டுவதில் முக்கிய பங்காற்றியவர். சிஐடியு அகில இந்திய பொதுக்குழு உறுப்பினராக 50 ஆண்டு காலத்திற்கு மேலாக தொழிற்சங்க பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர். அன்னாரது மறைவுக்கு தமிழ்நாடு மாநிலக்குழு செவ்வஞ்சலி செலுத்துகிறது. அவரை பிரிந்து வாடும் தோழர். கவுரி, மகள், மருமகன், மகன் மற்றும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு தெரிவித்திருக்கிறார்கள்.