tamilnadu

தீக்கதிர் முக்கிய செய்திகள்

சுற்றுலா தகவல் களஞ்சியம், நாட்டார் தெய்வங்களின் வரலாற்று நூல்கள் 
முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்

சென்னை, ஜூலை 9- தமிழ்நாடு சுற்றுலாத்துறையும் இந்து குழுமமும் இணைந்து தயாரித்துள்ள “FORTS OF TAMIL NADU – A WALK -  THROUGH” என்ற சுற்றுலா தகவல் களஞ்  சிய நூல் மற்றும் இந்து சமய அறநிலை யத்துறையும் இந்து குழுமமும் இணைந்து  தயாரித்துள்ள நாட்டார் தெய்வங்களின் வரலாறு, வழிபாட்டு முறைகள் மற்றும்  பண்பாட்டு முறைகள் ஆகியவற்றை  விளக்கும் வண்ணப் புகைப்படங்களு டன் கூடிய “Folk Deities of Tamil Nadu”  என்ற ஆங்கில நூல்களை முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் ஜூலை 9 செவ்வாய்க்கிழ மையன்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வெளியிட்டார்.

தமிழ்நாடு அரசின் தலைமைச் செய லகம் செயல்பட்டு வரும் சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டை, செங்கல்பட்டு மாவட்டம் சதுரங்க பட்டினம் (சத்ராஸ்)  கோட்டை, ஆலம்பரை கோட்டை, திரு வண்ணாமலை மாவட்டம் வந்தவாசி கோட்டை, விழுப்புரம் மாவட்டம் செஞ்சி  கோட்டை, உள்ளிட்ட 17 கோட்டைகள்  குறித்து இந்த நூலில் விளக்கப்பட்டுள்ளன.

நாட்டார் தெய்வங்களின் வழிபாட்டு  முறைகளிலும் அவற்றின் தன்மைகளி லும் விரைவான மாற்றங்கள் ஏற்பட்டு வரும் சூழலில் பாரம்பரியமிக்க இத்  தெய்வங்களையும் அவற்றின் வரலாற் றையும் மீட்டெடுக்க உதவும் காலப் பெட்ட கமாக இந்நூல் திகழும் என்று கூறப்படுகிறது.

இந்நூலினை தமிழில் மொழியாக்கம் செய்யும் பணிகள் இந்து சமய அற நிலையத்துறை மற்றும் இந்து குழுமத் தால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிகழ்ச்சியில், சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, தலைமைச் செயலாளர். சிவ்  தாஸ் மீனா, சுற்றுலா, பண்பாடு - அற நிலையங்கள் துறை முதன்மைச் செயலா ளர் பி. சந்தரமோகன், சுற்றுலா ஆணை யர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்  கழக மேலாண்மை இயக்குநர் சி.சமய மூர்த்தி, தி இந்து குழுமத்தின் தலைவர் - வெளியீட்டாளர் நிர்மலா லட்சுமணன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

ராஜேஷ் லக்கானி புகார்

சென்னை, ஜூலை 9- தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்  மானக் கழக (டான்ஜெட்கோ) நிர்வாக இயக்குநர் ராஜேஷ் லக்கானியின் படத்தை மர்ம நபர்கள் தவறாக பயன்  படுத்துவதாக புகார் எழுந்தது. இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில்  சிந்தாதிரிப்பேட்டை காவல் துறையினர்  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மஞ்சள் விலை குறைந்தது

ஈரோடு, ஜூலை 9- மஞ்சள் விலை குவிண்டா லுக்கு ரூ.2 ஆயிரம் குறைந்துள் ளது. 

உள்ளூர் சந்தையில் நுகர்வு குறைந்ததாலும் ஏற்றுமதி சரி வடைந்ததாலும் மஞ்சள் விலை  குறைந்துள்ளது. கடந்த 2 மாதங்க ளாக சராசரியாக குவிண்டால் 17  ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை யாகி வந்தது. உள்நாட்டு சந்தை யில் தேவை குறைந்ததாலும், வெளிநாடுகளுக்கான ஏற்றுமதி 20 சதவீதம் குறைவாக இருப்ப தாலும் விலை குறைந்துள்ளது.

தென்மேற்கு பருவமழை அதிகமாக பெய்துள்ளது

சென்னை, ஜூலை 9- தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை ஜூலை 9 ஆம் தேதி  காலை நிலவரப்படி இயல்பை விட  85 விழுக்காடு அதிகமாக  பெய் துள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஜூன் 1 ஆம் தேதி வழக்க மாக 66.7 மி.மீ. மழை பதிவாகும்  நிலையில் 123.7 மி.மீ. மழை பெய்  துள்ளது என்று தெரிவித்துள்ளது.

ஆம்ஸ்ட்ராங் கொலை: தேசிய ஆணையம் நோட்டீஸ்

சென்னை, ஜூலை 9- பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் சில நாட்களுக்கு முன்பு படுகொலை செய்யப்பட்டார்.

பத்திரிகை செய்தியின் அடிப்படை யில் ஆம்ஸ்ட்ராங் படுகொலை குறித்து  பட்டியலினத்தோர் ஆணையம் விசா ரணை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் இச்சம்பவம் குறித்து  விளக்கம் கேட்டு தேசிய பட்டியலினத் தோர் ஆணையம் தமிழ்நாடு அரசு மற்றும்  போலீஸ் டிஜிபிக்கு நோட்டீஸ் அனுப்பி யுள்ளது.