tamilnadu

img

நாளை முதல் பணி... பள்ளிக் கல்வித் துறை உத்தரவு

சென்னை:
கல்வித்துறை அலுவலர்கள், ஊழியர்கள் திங்கள் முதல் பணிக்கு வர வேண்டும் என தொடக்கக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

ஊரடங்கு காரணமாக, சென்னையில் உள்ள கல்வித்துறை இயக்குநரக அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள், நீண்ட நாட்களாகப் பணிக்கு வராமல் உள்ளனர்.இந்நிலையில், பத்தாம் வகுப்பு தேர்வுப்பணிகள் மற்றும் அடுத்த கல்வியாண்டு தொடக்கத்திற்கான ஏற்பாடுகள் தற்போது தொடங்கியுள்ளன. இதன் காரணமாக, உடனடியாக இயக்குநரக அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் பணிக்குத் திரும்ப வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.பள்ளிக்கல்வித்துறையில், முக்கியப் பிரிவுகளின் அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் பணிக்குத் திரும்பிய நிலையில், தொடக்கக் கல்வித்துறையிலும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தாக்கம் குறையாத நிலையில், பணிக்குத் திரும்ப ஊழியர்கள் தயக்கமாக உள்ளதாகத் தெரிவிக்கின் றனர்.மேலும் பெரும்பாலான ஊழியர்கள் வெளி மாவட் டங்களில் இருந்து சென்னையில் தங்கி பணிபுரிந்து வருவதால், அவர்களுக்குத் தங்குவதற்கான இடம் கிடைக்குமா என்பது குறித்தும் அச்சமடைந்துள் ளனர்.17ஆம் தேதிக்குப் பின், வரும் ஊரடங்கு நீட்டிப்பில் போக்குவரத்தை இயக்காமல் இருந்தால், அவர்கள் வருவதில் பெரும் சிரமமாக இருக்கும் என வருத்தத்துடன் தெரிவித்தனர்.