tamilnadu

இன்றோடு விடைபெறுகிறது கோடைவெயில்

சென்னை, மே 28-தமிழகத்தில் கோடை வெயில் முடிவடைய உள்ளதால், வெயிலின் தாக்கம் படிப்படியாக குறைய வாய்ப்புள்ளது.தமிழகத்தில் கடந்த 5ஆம் தேதியன்று கோடை வெயில் தொடங்கி யது. ஏற்கனவே வெயில் கொளுத்தி வந்த நிலையில்,கோடை வெயிலால் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்தது. சுட்டெரித்த வெயிலால் மக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகினர். பகல் நேரத்தில் வெளியில் செல்ல முடியாத அளவுக்கு வெயிலின் தாக்கம் இருந்தது. அனல் காற்றால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர்.கோடை வெயிலால் சென்னை, திருத்தணி, வேலூர், மதுரை, கரூர், சேலம், தருமபுரி, திருச்சி, நாகை உள்ளிட்ட இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டியது. கோடைகாலத்தில் அவ்வப்பொழுது மழை பெய்யும். ஆனால் இந்தாண்டு குறிப்பிடும்படி மழை பெய்யவில்லை. இந்நிலையில், மக்களை வாட்டி வதைத்த கோடை வெயில் புதன்கிழமையோடு (மே 29) முடிவடைகிறது. இதனால் வெயிலின் தாக்கம் குறைய வாய்ப்புள்ளது.