tamilnadu

பள்ளிகளின் உட்கட்டமைப்புக்கு ரூ.163 கோடி ஒதுக்கீடு 

 சென்னை, ஜூலை 8- அரசு பள்ளிகளின் வகுப்பறைகள், பழுதுபார்த்தல், கழிப்  பறைகள் அமைத்தல், கூடுதல் வகுப்பறைகள், ஆய்வகங்கள், நூலகங்கள், கணினி அறைகள் 163 கோடியே 45 லட்சம்  செலவில் அமைத்து தரப்படும் என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். பேரவை விதி 110ன் கீழ் இந்த அறிவிப்பை வெளியிட்ட அவர், 2650 அரசு மேல்நிலைப் பள்ளிகள், 244 அரசு உயர்நிலைப்  பள்ளிகளில் பள்ளி ஒன்றுக்கு ரூ.75,000 வீதம் சிசிடிவி கேமரா  வசதி அமைத்துத் தரப்படும். அனைத்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 10ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வரும் காலனிக்கு பதிலாக 2020-21 ஆம் கல்வி ஆண்டு முதல் ஷூ மற்றும் சாக்ஸ் வழங்கப்படும் என்றார். கொடைக்கானலில் உள்ள அன்னை தெரசா மகளிர் பல் கலைக்கழகத்தில் 10 வகுப்பறை கட்டடங்கள், கருத்தரங்கு கூடம் மற்றும் ஆய்வுக் கூடம் உள்ளிட்ட பணிகளுக்காக ரூ.30  கோடி ஒதுக்கப்படும். மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்  கழகத்தில் ஆராய்ச்சிகளை உலகத்தரத்திற்கு மேம்படுத்த அதி நவீன வசதிகளுடன் கூடிய உரிமையும் ரூ. 20 கோடி மதிப் பீட்டில் நிறுவப்படும் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் உட்  கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த பல்கலைக்கழக அறி வியல் கருவி மயமாக்கல் மையம் ரூ.5 கோடி செலவில் அமைக்கப்படும் என்றும் அவர் மேலும் கூறினார்.