tamilnadu

img

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் கவனத்திற்கு!

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்களுக்குத் தேவையான உதவிகளைக் கோரும் வகையில் வாட்ஸ்அப் எண் மற்றும் ட்விட்டர் கணக்கை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

வரலாறு காணாத மழையால் பாதிக்கப்பட்டுள்ள திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் வசிக்கும் மக்கள் தமிழ்நாடு அரசின் வாட்ஸ்அப் எண் - 8148539914 மற்றும் ட்விட்டர் மூலமாக நிவாரண உதவிகள், மருத்துவ உதவிகள், மீட்பு நடவடிக்கைகள் உள்ளிட்டவற்றை தெரிவிக்கலாம் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது:  

"குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி. கன்னியாகுமரி. தென்காசி மாவட்டங்களில் பரவலாக அனைத்து பகுதிகளிலும் பெய்து வரும் கனமழை முதல் அதிகனமழை காரணமாக பொது மக்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்களை அரசு பரிவுடன் தீவிரமாகக் கண்காணித்து வருகிறது.

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் வசித்துவரும் பொதுமக்களின் நலன் கருதி, மக்களுக்கு தேவைப்படும் உதவிகள் அனைத்தையும் உடனுக்குடன் வழங்கிட களத்தில் அதிகாரிகள் ஆயத்தமாக உள்ளனர்.

எனவே பாதிப்புக்கு உள்ளாகியுள்ள பொது மக்கள் தங்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள், தேவைப்படும் நிவாரண உதவிகள், மருத்துவ உதவிகள். மீட்பு நடவடிக்கைகள் முதலான விவரங்களை சமூக வலைதளத்தின் (Social Media) மூலம் தமிழ்நாடு அரசின் வாட்ஸ்அப்எண் : 8148539914 மற்றும் ட்விட்டர் மூலமாக தெரிவிக்குமாறு பொது மக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல் தெரிவிக்க:
வாட்ஸ்அப்எண்: 8148539914
ட்விட்டர் Username - @tn_rescuerelief, @tnsdma
பேஸ்புக் ஐடி: @tnsdma "
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.