சென்னை, ஜூன் 10- சென்னை டோல்கேட் மெட்ரோ ரயில் நிலையம் முதல் புது வண்ணாரப் பேட்டை வரையிலான 2.4 கி.மீ. நீளமுள்ள திருவொற்றியூர் உயர்மட்ட சாலையை, உலக வங்கி சென்னை நகர கூட்டுத் திட்டத்தின் கீழ், ரூ.64.14 கோடி செலவில் சீரமைக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
திருவொற்றியூர் உயர்மட்ட சாலை வடசென்னையில் உள்ள ஒரு முக்கியப் பாதையாகவும், முக்கிய இணைப்பாகவும் உள்ளது. இங்கு மெட்ரோ ரயில் அறிமுகப்படுத்தப் பட்டதால், நகரின் பிற பகுதிகளில் இருந்தும் ஏராளமான மக்களின் வருகைக்கு வழிவகுத்தது. இந்நிலையில் திருவொற்றியூர் சாலை சீரமைப்பு திட்டத்தின் கீழ் அந்தப் பகுதி ஒருவழிப் பாதையாக மாற்றப்பட்டு, அந்தப் பகுதியில் மெட்ரோ ரயில் கட்டுமானத்தின் போது ஏற்பாடு செய்யப்பட்டிருந்த படி, அருணாசலேஸ்வரர் தெருவுக்கு போக்குவரத்து மாற்றப்படும்.
பள்ளி குழந்தைகள் சாலையைக் கடக்க ஒரு நியமிக்கப்பட்ட இடம் திட்டத்தின் ஒரு பகுதியாக இடம்பெற்றுள்ளது. அதே நேரத்தில் வாகன நிறுத்தத்திற்கும் தனி இடம் உள்ளது. மேலும் அந்த சாலையில் ஓடும் மழைநீரை வெளியேற்றுவதற்கு நுண்ணிய அடிப்பகுதிகளைக் கொண்ட வடிகால் அமைப்பு ஏற்படுத்தப்படும். இதனால் மழைநீர் வடிகால்கள் பிரச்சனை குறையும் என அதிகாரிகள் தெரிவித்தனர். ஜங்சன் பிளாசாவில் நீரூற்று, குழந்தைகள் விளையாடும் பகுதி, போஸ்ட்-டாப் லைட்டிங், ஜிம், லேண்ட்ஸ்கேப்பிங், டிஜிட்டல் டிஸ்ப்ளேக்கள் மற்றும் இருக்கை வசதி களை ஏற்படுத்தவும் திட்டமிடப் பட்டுள்ளது.
இந்த திட்டம் மாநில உள்கட்டமைப்பு மற்றும் வசதிகள் நிதி மற்றும் பெருநகர சென்னை மாந கராட்சி மூலதன நிதியைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும். இந்த திட்டத்திற்கு மாநில அரசு நிர்வாக அனுமதி வழங்கியதாகவும், பின்னர் ஒப்பந்தங்கள் கோரப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.