tamilnadu

img

ஜிஎஸ்டி அறிக்கை சமர்ப்பிக்க அவகாசம் அளிக்க அவசர சட்டம் பிறப்பிப்பு தமிழக அரசு அறிவிப்பு

சென்னை,மே 24- ஜி.எஸ்.டி. வரி செலுத்துவது, சரக்கு தொடர்பான அறிக்கை சமர்ப்பிப்பது போன்றவற்றுக்கு கால அவகாசம் அளிப்பதற்கான அவசர சட்டத்தை தமிழக ஆளுநர் பன்வாரி லால் பிறப்பித்துள்ளார்.  இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கொரோனா பரவலின் தாக்கம் காரணமாக உலகம் முழுவதும் மக்க ளுக்கு பல பாதிப்புகள் ஏற்பட்டுள் ளன. இதில் வணிகத்தில் ஈடுபடுவோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே வரி செலுத்துவது உள்ளிட்ட பல்வேறு சட்டங்களில் சில தளர்வு களை அளிப்பது இப்போது அவசிய மாகிறது. தமிழ்நாடு ஜி.எஸ்.டி. சட்டப்படி வணிகர்கள் பல்வேறு கணக்குகளை உரிய காலத்துக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும், நிலுவைத் தொகைகள், வெளியிடங்களுக்கு விநியோகிக்கப்பட்ட சரக்குகள் பற்றிய அறிக்கை சமர்ப்பிப்பது, கூடுதல் வரிப் பணத்தை திருப்பிக் கேட்பதற்கு விண்ணப்பிப்பது, மேல்முறையீடு விண்ணப்பம் உள்பட பல நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டும். தற்போதுள்ள சூழ்நிலையில், இவற்றுக்கான காலக்கெடுவை நீட்டிப்பது தொடர்பான தளர்வுக்கு ஏது வாக தமிழ்நாடு ஜி.எஸ்.டி. சட்ட த்தை திருத்தி, ஆளுநர்  பன்வாரி லால் புரோகித் அவசர சட்டத்தை பிறப்பித்துள்ளார். மேலும், தமிழ்நாடு மதிப்புக் கூட்டு வரி சட்டம் (வாட்), தமிழ்நாடு பந்தைய வரிச்சட்டம், கேளிக்கை வரிச் சட்டம், ஆடம்பர வரி சட்டம் மற்றும் பல சட்டங்களில் குறிப்பிடப்பட்டுள்ள காலக்கெடு மற்றும் தமிழ்நாடு வரிவிதிப்பு சட்டத்தின் காலக்கெடு தொடர்பான விதிகளை தளர்த்து வதற்கான திருத்தத்தை ஏற்படுத்தும் அவசர சட்டத்தையும் ஆளுநர்  பிறப்பித்துள்ளார்.

அதன்படி, இந்த சட்டத்தின் கீழ் நோட்டீஸ் பிறப்பித்தல், அறி விக்கை வெளியிடுதல், செயல்முறை களை நிறைவு செய்தல், வழக்கின் உத்தரவை ஆணையமோ அல்லது தீர்ப்பாயமோ வெளியிடுதல், மேல்முறையீட்டுக்கு விண்ண ப்பித்தல், பதில் மனு தாக்கல் செய்தல் போன்றவற்றுக்கான காலக்கெடு வை தளர்த்தி தளர்வுகள் அறிவிக்கப் பட்டுள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. மத்திய அரசின் சட்டத்திருத்தம் அடிப்படையில் இந்த அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. கால அவகாசத்தின் அளவு பற்றிய அறிவிப்பு பின்னர் வெளியாகும் என்று  அதிகாரிகள் சிலர் குறிப்பிட்டனர். 

;