tamilnadu

மாஞ்சாநூல் பயன்படுத்தினால் குண்டர் சட்டம்: காவல்துறை ஆணையர் எச்சரிக்கை

சென்னை, மே 28 - மாஞ்சாநூல் பயன்படுத்துவோர் மீது குண்டர் சட்டம் பாயும்  என்று பெருநகர சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வ நாதன் எச்சரித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாஞ்சா நூல் வைத்து பட்டம் விடுவது தொடர்பாக இந்த ஆண்டு  95 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 80 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். பட்டம் விடுவது தொடர்பாக இந்த ஆண்டுதான் அதிக நடவ டிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  மாஞ்சா நூல் பட்டம் விடுவோர்,  தயாரிப்போர், வாங்குவோர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார். ஊரடங்கு காலத்தில் சென்னையின் பல பகுதிகளிலும் பட்டம் விடுவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனை  தடுக்கும் பொருட்டாக காவல் துறையினர் கடும் நடவடிக்கை  எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

;