tamilnadu

எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர்கள் மூலம் நாசகர வேலை

கூட்டாட்சி கோட்பாட்டை சிதைக்கும்   வகையில் ஆளுநர்கள் மூலம் ஒன்றிய  அரசு அரங்கேற்றும் நாசகர வேலைகளைக் கண்டித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில், பிப்ரவரி 8 அன்று நாடு தழுவிய அளவில் கண் டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற உள்ளன.கூட்டாட்சி கோட்பாட்டை சிதைக்கும்   வகையில் ஆளுநர்கள் மூலம் ஒன்றிய  அரசு அரங்கேற்றும் நாசகர வேலைகளைக் கண்டித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில், பிப்ரவரி 8 அன்று நாடு தழுவிய அளவில் கண் டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற உள்ளன.

அதனொரு பகுதியாக, தமிழ்நாட்டிலும் பிப்ரவரி 8 அன்று கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகின்றன. இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு  மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

மசோதாக்களுக்கு ஒப்புதல்,  நிதிஒதுக்கீட்டில் முட்டுக்கட்டை
நரேந்திர மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசு, தொடர்ந்து மாநில உரிமைகள் மீதான தாக்குதலை நடத்தி வரு கிறது. பாஜக அல்லாத எதிர்க்கட்சிகள் ஆளக் கூடிய மாநிலங்களை வஞ்சிக்கும் வகையில் நிதிப் பகிர்வு உள்ளிட்ட பல அம்சங்களில் கூட்டாட்சிக் கோட்பாட்டிற்கு விரோதமான நடவடிக்கைகளை கையாண்டு வருகிறது. 

ஆளுநர்களை பயன்படுத்தி சட்டப்பேர வையில் நிறைவேற்றும் மசோதாக்களுக்கு ஒப்புதல் தர மறுப்பது, மாநிலங்களுக்கு போதிய நிதியை ஒதுக்க மறுப்பதுடன், மாநி லங்களின் வளர்ச்சிக்கு கடன் பெறுவதற்கும் தடை விதிப்பது, அரசியல் சாசன சட்ட விழு மியங்களை காலில் போட்டு மிதிப்பது, கூட்டா ட்சி தத்துவத்தை சிதைப்பது போன்ற நாசகர வேலைகளை ஒன்றிய பாஜக அரசு செய்து  வருகிறது. 

குறிப்பாக, தமிழகம், கேரளம், மேற்கு வங்கம், பஞ்சாப், தில்லி உள்ளிட்ட பல மாநிலங்களில் ஆளுநர்களைப் பயன்படுத்தி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங் களை செயல்பட விடாமல் முடக்கம் செய்துவருகிறது.

முதல்வர் பினராயி விஜயன்  தலைமையில் தில்லியில் தர்ணா

இந்நிலையில் ஒன்றிய அரசு  தொடுத்து  வரும் தாக்குதலுக்கு எதிராகவும், கேரள மாநில ஆளுநரைக் கண்டித்தும், மாநில உரிமைகள் மற்றும் கூட்டாட்சி கோட்பாட்டை பாதுகாக்கும் வகையிலும் 2024 பிப்ரவரி 8  அன்று புதுதில்லியில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் தலைமையிலான கேரள மாநில இடது ஜனநாயக அரசாங்கத்தின் சார்பில் முதல்வர் பினராயி விஜயன் தலை மையில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர் கள், எதிர்க்கட்சி தலைவர்கள் கலந்து கொள்ளும் மாபெரும் தர்ணா போராட்டம் நடைபெறுகிறது. இப்போராட்டத்திற்கு ஆதரவாக நாடு முழுவதுமே கண்டன இயக்கங்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்தவுள்ளது.

தமிழகத்திலும் மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம்
தமிழகத்திலும் மாநில உரிமைகள் பறிப்பு, கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக  செயல்படும் ஒன்றிய அரசையும், ஆளு நர்களையும் கண்டித்து பிப்ரவரி 8 அன்று மாநிலம் முழுவதும் மாவட்டத் தலைநகரங் களில் சிபிஐ(எம்) சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இந்த ஆர்ப் பாட்டத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்ட ணியின் மாநில -மாவட்டத் தலைவர்கள், தோழமைக் கட்சியினர் திரளாக கலந்து கொள்கின்றனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனைத்துத் தரப்பு மக்களும், ஜனநாயக சக்திகளும் பேராதரவு தந்து ஒன்றிய அரசுக்கு எதிராக கண்டன குரலெழுப்ப வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறைகூவி அழைக்கிறது. இவ்வாறு கே. பாலகிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார்.