உழுபவனே நிலத்திற்குச் சொந்தக்காரன்
உழைப்பவனே தேசத்தின் உரிமையாளன்
புழுவைப் போல் கிடந்ததவும் பிச்சை வாங்கும்
புன்மை நிலை அடைந்ததுவும் வாடைக்காற்றில்
அழுதுதுயர் அடைந்ததுவும் இனிமே லில்லை
அடங்காத வேகமோடும் ஆர்வத்தோடும் எழுந்துவா
உழைப்பவரின் போராட்டத்தில்
இரண்டின்றிக் கலந்துவிட இதுதான் நேரம்
- கவிஞர் தமிழ்ஒளி
இன்று கவிஞர் தமிழ்ஒளி பிறந்த நாள்