tamilnadu

சென்னை முக்கிய செய்திகள்

திருவொற்றியூரில் மீன் பிடிக்க சென்றவர் காணவில்லை

சென்னை, ஜூன் 16- மீன்பிடிக்கச் சென்ற தனது மகனை 6 நாட்களாக காணவில்லை என்றும் கண்டுபிடித்து தர தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் கோரிக்கை விடுத்துள்ளார்.

திருவொற்றியூர் திருச்சி னாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (32). இவர் கடந்த 10ஆம் தேதி 5 பேருடன் பைபர் படகில் மீன்பிடிக்க கட லுக்குச் சென்றுள்ளார். எதிர்பாரா மல் வீசிய காற்றினால் கடலில் விழுந்த கார்த்திக் அவருடன் வந்த அவரது தம்பி மற்றும் சக மீனவர்கள் தேடியும் கிடைக்கவில்லை.

இதையடுத்து இது குறித்து மீஞ்சூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தது மட்டு மல்லாது மீன்வளத் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதி காரிகள், காவல் துறையி னரும் சேர்ந்து தேடி வரு கின்றனர்.

இந்நிலையில் கடலுக்கு சென்ற மகன் 6 நாட்கள் ஆகியும் கிடைக்காததால் தமிழ்நாடு அரசு அவரை கண்டுபிடித்து தர நட வடிக்கை எடுக்க வேண்டும் என அவரது தாய் கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்று பக்ரீத் பண்டிகை:  மெட்ரோ ரயில் நேரத்தில் மாற்றம்

சென்னை, ஜூன் 16- பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சனிக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என தெரி விக்கப்பட்டுள்ளது. 

உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமிய மக்களால் பக்ரீத் பண்டிகை ஆண்டு தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு உலகம் முழுவதும் திங்கட்கிழமை (ஜூன் 17) பக்ரீத் கொண்டாடப்பட இருக்கிறது.

பக்ரீத் விடுமுறை நாளான திங்கட்கிழமை அட்டவணைப்படி இல்லா மல் சனிக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நெரிசல் மிகுநேரமான காலை 8 மணி முதல் 11 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை யும் 6 நிமிட இடைவெளியில்  ரயில்கள் இயக்கப்படும். அதிகாலை 5 மணி முதல் காலை 8 மணி வரையும், காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரையும் 7 நிமிட இடைவெளியில்  ரயில்கள் இயக்கப்படும். இரவு 10 முதல் 11 மணி வரை 15 நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.a

போதை மாத்திரை கடத்திய 4 பேர் கைது

சென்னை, ஜூன் 16- ரயில் மூலம் போதை மாத்திரைகளை கடத்திய 2 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தண்டையார்பேட்டை பகுதியில் போதை மாத்திரைகள் விற்பனை செய்வதாக  காவல்துறை யினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து காவல்துறையினர்  அந்த பகுதியில் சோதனையில் ஈடுபட்ட போது, கைலாச தெருவில் சந்தேகப்படும்படி வந்த வாலிபரை மடக்கி சோதனை செய்தனர். அப்போது அவரிடம் போதை மாத்திரைகள் இருப்பது தெரிந்தது. 

இது தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தியபோது, திரு வொற்றியூர் கார்கில் நகரைச் சேர்ந்த  கார்த்திக் (25), அவரது கூட்டாளிகள் ரெட் `ஹில்ஸ் பகுதியைச் சேர்ந்த தினேஷ் (எ) மண்ட தினேஷ் (26), எண்ணூர் வள்ளுவர் நகரை சேர்ந்த அப்துல் கரீம் (25), மணலி புதுநகர் சேர்ந்த மதன்குமார் (18) ஆகிய 4 பேரும் சேர்ந்து ஆந்திரா மாநிலத்திற்குச் சென்று நைட்ரோ வெட் என்னும் 10  போதை மாத்திரைகள் 250 ரூபாய்க்கு வாங்கிக் கொண்டு ரயில் மூலம் வந்து தண்டையார்பேட்டை பகுதியில் 10 மாத்திரைகள் 1,000 ரூபாய்க்கு விற்று வந்தது தெரிய வந்தது. 

இதையடுத்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து கார்த்திக், தினேஷ் அப்துல் கரீம், மதன்குமார் ஆகிய 4 பேரை கைது செய்து,  அவர்க ளிடம் இருந்த 4 ஆயிரம் போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.