திருவள்ளூர் மாவட்டம், கவரைப்பேட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் புதியதாக மழலையர் வகுப்பு துவக்க நிகழ்ச்சி வியாழனன்று (ஜூலை 4) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் 135 மாணவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. முன்னதாக மாணவர்கள் அனைவரும் மலர் மாலை அணிவித்து மேலதாளத்துடன், ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர். பொன்னேரி மாவட்டக்கல்வி அலுவலர் பா.ரவி, வட்டார கல்வி அலுவலர்கள் பூவராகமூர்த்தி, முனிராஜசேகர், பள்ளியின் தலைமை ஆசிரியர் ப.திரிபுரசுந்தரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.