கும்மிடிப்பூண்டி அருகே விபத்துகளில் 6 பேர் பலி
திருவள்ளூர், பிப்.14- ஆந்திர மாநிலம் ஓங்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் யஷ்வந்த் (40). தொழிலதிபரான இவர் வெளிநாடு செல்லும் தனது உறவினரை சென்னை விமான நிலையத்தில் வழி அனுப்பிவிட்டு, குடும்பத்துடன் காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த பனங்காடு என்ற பகுதியில் வந்த போது சாலையோரம் நின்று கொண்டிருந்த டேங்கர் லாரி மீது கார் மோதியது. இதில் கார் ஓட்டி வந்த யஷ்வந்த், அவரது மனைவி அனு செல்வி (30), 9 மாத குழந்தை, மகள் ஸாரி, சகோதரி விஜயலட்சுமி(45) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இது பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தடா காவல்துறையினர் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல், பொன்னேரி அடுத்த கொக்கு மேடு பகுதியில் நின்றுகொண்டிருந்த லாரி மீது இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் குணசேகர் (38) சதீஷ்(35) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அடுத்தடுத்து இரு வேறு விபத்துகளில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
நடக்க இருப்பவை
மருத்துவர் பேராசிரியர் என்.லட்சுமிநரசிம்மன் நினைவேந்தல் கூட்டம். நாள்: 16 பிப். 2020, நேரம்: பகல் 11 மணி, இடம்: ஐ.இ. எல்.சி. ஹால், வான்மலர் திருச்சபை வளாகம், எண். 47, எல்டாமஸ் சாலை, தேனாம்பேட்டை, சென்னை - 18. நிகழ்ச்சி ஏற்பாடு: தமிழ்நாடு நல்வாழ்வு இயக்கம், சென்னை மற்றும் மக்கள் நல்வாழ்வுக்கான மருத்து வர்கள் சங்கம்.
வாக்காளர் பட்டியல் வெளியீடு
காஞ்சிபுரம், பிப்.14- காஞ்சிபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து கட்சி பிரமுகர் முன்னிலை யில் இறுதி கட்ட வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சி யர் பா.பொன்னையா வெளி யிட, மாவட்ட வருவாய் அலு வலர் சுந்தரமூர்த்தி பெற்றுக் கொண்டார். காஞ்சிபுரம் மாவட்டத் தில், சோழிங்கநல்லூரில் 6,60,317 வாக்காளர்கள், ஆலந்தூரில் 3,74,399, ஸ்ரீபெருமந்தூரில் 3,42,924, பல்லாவரத்தில் 4,21,375, தாம்பரத்தில் 3,96,239, செங்கல்பட்டில் 4,17,155, திருப்போரூரில் 2,85,069, செய்யூரில் 2,21,828, மது ராந்தகத்தில் 2,23,612, உத்திர மேரூரில் 2,54,465 காஞ்சி புரத்தில் 3,00,847 வாக்காள ர்கள் உள்ளனர்.