tamilnadu

img

சென்னை முக்கிய செய்திகள்

தீக்கதிர்  நிருபர் கவாஸ்கர் தந்தை காலமானார்

சென்னை,ஜூன் 5- தீக்கதிர் சென்னை பதிப்பு தென்சென்னை மாவட்ட செய்தியாளர் செ.கவாஸ்கர் தந்தையார் டி.செல்வம் புதனன்று (ஜூன் 5) சென்னையில் காலமானார். அவருக்கு  வயது 67.

சென்னை அரும்பாக்கம் மெட்ரோ ரயில்நிலையம் அருகில் (ஐஸவர்யா திருமண மண்டபம் எதிரில்) உள்ள கமலா நேரு நகர்  2ஆவது தெரு, சூளைமேடு, 100அடி  சாலையில் உள்ள அவரது இல்லத்தில் உடல் வைக்கப்பட் டுள்ளது.

நீண்ட நாட்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த செல்வம் சிகிச்சை பலனின்றி  உயிரிழந்தார். அன்னாரது உடலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியினர், பத்திரிகை மற்றும் ஊடகவியலாளர்கள் அஞ்சலி  செலுத்தினர். அவரது உடல் சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு வியாழனன்று 11.30 மணியளவில் தானமாக வழங்கப்படுகிறது.

க்ராஸ் நிறுவனத்தை கேவல் கிரண்  குளோத்திங் கையகப்படுத்தியது

சென்னை, ஜூன் 3- ஆடவர் பெண்டிர் ரெடிமேட் துணிகளை தயாரிப்பதில் முன்னணியில் உள்ள க்ராஸ் கேஷுவல்ஸ் நிறுவனத்தின் 50 சதவீத பங்குகளை கேவல் கிரண் குளோத்திங் நிறுவனம்  வாங்கி உள்ளது.

 இந்த பங்குகளின் மதிப்பு 166.51 கோடி ரூபாய் ஆகும்.  இதன் மூலம் கேவல் கிரண் குளோத்திங் நிறுவனம் தனது வர்த்தகத்தை இந்தியா மற்றும் ஐக்கிய அரபு நாடுகளில்  விரிவுபடுத்துவதோடு பெண்களுக்கான புதிய டெனிம் ஆடைகளையும் அறிமுகம் செய்துள்ளது. க்ராஸ் கேஷுவல்ஸ் நிறுவனம் ‘க்ராஸ்’ என்னும் பெயரில்  பெண்களுக்கான ஜீன்ஸ் ஆடைகளை விற்பனை செய்து  வருகிறது. 

தங்கம் விலை குறைந்தது

சென்னை,  ஜூன்  5- சென்னையில் புதனன்று ஆபரணத்தங்கத்தின் விலை  சவரனுக்கு ரூ.160 குறைந்துள்ளது. கிராமுக்கு ரூ. 20   குறைந்து ஒரு கிராம் ரூ. 6,725-க்கும் சவரன் ரூ.53,800க்கு விற்பனையானது.

திருபெரும்புதூரில் நோட்டாவுக்கு 26 ஆயிரம் ஓட்டுக்கள்

செங்கல்பட்டு,ஜூன் 5- நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில்  திருபெரும்புதூர் தொகுதியில் 26 ஆயிரம் நோட்டா ஓட்டுகள் பதிவாகியுள்ளன.

 திருபெரும்புதூர் தொகுதியில் இந்தியா கூட்டணியின் சார்பில் திமுக பொரு ளாளரும் முன்னாள் மத்திய அமைச்சரு மான டி ஆர் பாலு, மற்றும் அதிமுக, தமிழ்  மாநில காங்கிரஸ், நாம் தமிழர் கட்சி சார்பில் வேட்பாளர்கள் களமிறங்கினர்.

 மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 23,82,119 இதில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை 14,35,243 ஆகும்.

கடந்த ஜூன் 4-ல் நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் 31 சுற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

இதில் திமுக சார்பில் போட்டியிட்ட டி ஆர்  பாலு 7,49,423வாக்குகளும், அதிமுக வேட்பா ளர் 2,68,437, தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பா ளர் பெற்ற வாக்குகள்2,07,366 நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் பெற்ற வாக்குகள் 1,38,721 வாக்குகளும் பெற்றுள்ளனர். இதில் குறிப்பிடத்தக்க வேண்டிய தகவல் நோட்டா வில் 26,658 வாக்குகள் பதிவாகியுள்ளன என்பதாகும்.

போதை மாத்திரை  விற்ற 3 பேர் கைது

சென்னை, ஜூன் 5- சென்னை  அண்ணாநகர், அரும்பாக்கம், அமைந் தகரை, திருமங்கலம், ஜெ.ஜெ.நகர், நொளம்பூர், சூளைமேடு உள்ளிட்ட பகுதிகளில் போதை மாத்திரை விற்பனை செய்யப்படுவதாக காவல் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

மீனம்பாக்கம் பகுதியை  சேர்ந்த பரத் (23), கிண்டியை சேர்ந்த சஜன்குமார் (24), இவரது கூட்டாளி ஜமால் அகமது (28) என்பதும் இவர் கள் மும்பை, கொல்கத்தா, ஆந்திரா உட்பட பகுதி களில் இருந்து குறைந்த விலைக்கு போதை மாத்திரைகள் வாங்கி அதிக விலைக்கு விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது.

இதையடுத்து காவல் துறையினர் 3 பேரையும் கைது செய்து, போதை மாத் திரைகளை பறிமுதல் செய்த னர். 

சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு 1,265 சிறப்பு  பேருந்துகள்

சென்னை,  ஜூன் 5- திருமண நாள், வார இறுதி நாட்களை யொட்டி 7,8 மற்றும் 9-ந்தேதிகளில் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து  திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம் புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 7-ந்தேதி 835 பேருந்துகளும் 8-ந்தேதி 570 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளது.

கோயம்பேட்டில் இருந்து நாகப்பட்டி னம், வேளாங்கண்ணி, ஓசூர், பெங்க ளூருக்கு இந்த இரு நாட்களும் 160 பேருந்து கள் இயக்கப்படுகிறது.

10-ந்தேதி பள்ளிக்கூடம் திறக்க இருப்ப தால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும்  அண்டை மாநிலங்களில் இருந்து சென்னை திரும்ப 9-ந்தேதி 705 பேருந்துகள் இயக்கப் பட உள்ளன.

இந்த நிலையில் வருகிற 7-ந் தேதி (வெள்ளிக்கிழமை) முதல் ஞாயிற்றுக் கிழமை வரை பயணம் செய்ய 30 ஆயிரம் பேர்  முன்பதிவு செய்துள்ளனர். நீண்ட தூரம் பயணம் செல்லக்கூடியவர்கள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு www.tnstc.in மற்றும் மொபைல் ஆப் மூலம் முன்பதிவு செய்து பயணிக்கலாம் என்று மேலாண் இயக்குநர் தெரிவித்துள்ளார்.