பொதுத்துறைகளை தனியாருக்கு விற்பதை கண்டித்தும், இந்திய பொருளாதாரத்தை சிதைத்து, கல்வியை ஏழை மக்களுக்கு மறுக்கும் மோடி அரசை கண்டித்து, திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் தெருமுனை பிரச்சாரம் நடந்தது. சி.அப்பாசாமி ( சிபிஎம் ), பி.ரவிச்சந்திரன்(சிபிஐ) தலைமை தாங்கினர். சிபிஎம் பெ.கண்ணன், சிவப்பிரகாசம், சிபிஐ இரா.தங்கராஜ், கோவிந்தசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.